Category Archives: சிவப்பு மஞ்சள் பச்சை

சிவப்பு மஞ்சள் பச்சை

raakaachi-rangamma-song-lyrics

ராக்காச்சி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிதா கார்த்திகேயன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Raakaachi Rangamma Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…

பெண் : தார் சாலை சிங்கம்தான்…
சேலன்ஞ் பண்ணிதான்…
வந்தானே தொல்லை தந்தானே…

பெண் : ஏ… கோளாறு இல்லாத…
பூலோகம் காணாத…
மாப்பிள்ளை கேட்குறானே… ஏ… ஏ…

பெண் : பாவமே பாக்காம…
வச்சிதான் செய்யிறான்…
வெத வெதமா போட்டோ பார்த்தும்…
வேணான்னு சொல்லுறான்…

பெண் : ரன்வீரும் ரன்பீரும்…
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்…
இவனோட அக்கா என்ன…
தீபிகா படுகோன்னா…

BGM

பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும்…
இவன் மேல கோவம் வல்லை…
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா…
அட கமுக்கமா சிரிப்பா உள்ள…

குழு (பெண்கள்) : புரியாத ஒன்னு…
அவளையும் இவனையும் பூட்டுது…
அறியாம நெஞ்சு…
அடிக்கடி அடிதடி பண்ணுது…

பெண் : இவனோட உள்ளம் வெள்ளை…
விழுந்துட்டா படிச்ச புள்ள…
அடடா எலியும் புலியும்…
மனசைத்தான் மாத்திக்கிச்சே…

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்ச்சர்ரா டார்லிங்கா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
சில்வண்ட போல சுத்தி…
வந்தாலம்மா…

பெண் : டா போட்டா டேலண்ட்டா…
டி போட்டான் டீசன்ட்டா…
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா…

பெண் : அவ தீ வெச்சா சைலண்டா…
பத்திதான் வையேன்டா…
நாள் எல்லாம் போச்சே நோ என்டா…

பெண் : பொல்லாத புள்ளான்டான்…
நிக்காம வெள்ளான்டான்…
ரக ரகமா ரகள செஞ்சி…
இவ மனசு களவான்டான்…

பெண் : கில்லாடி சுள்ளான்டான்…
நெஞ்செல்லாம் உட்காந்தான்…
ஒரு உறவ தேடி வந்து…
புது உறவ கொண்டாந்தான்…


Notes : Raakaachi Rangamma Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ராக்காச்சி ரங்கம்மா பாடல் வரிகள்.


இதுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்நரேஷ் ஐயர் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Idhudhaan Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : விழி ஆதில் விழுவேனா…
இனி உன்னை விடுவேனா…
விரலுடன் அட விரல் கடத்திய காதல மறப்பேனா…
உடன் வருவேனா…
உயிர் தொடுவேனா…
இலை நுனியில ஒரு துளியென தவிக்கிறேன் சரிதானா…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…
உனக்காய் மறுகணமும்…
எனக்குள் உருகணும் உயிரே… ஹ்ம்ம்…

BGM

ஆண் : உன் மனசு…
அடம் பிடிக்கிற கொழந்தை…
அதை என் இடுப்பில்…
நான் சுமந்திட ஆசை…
நீ சிரிக்க…
அட எதுக்கு நீ மறந்த…
அது நான் கேட்க்கும் மெல்லிசை… அ… அ…

ஆண் : உனக்கென வாழ உயிர் ஏங்குதே…
உன் நினைவொன்றே என்னை தாங்குதே…

பெண் : எதிலும் நீயடா…
எதுவும் நீயடா…
போடா… ஓ… ஓ…

பெண் : இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் காண துடித்த நாளோ…
இதுதான் இதுதான் இதுதான்…
இருவரும் சேர துடித்த நாளோ…

ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்…
அருகில் இருக்கணும்…

பெண் : ஆ… அருகில் இருக்க நீ…
இறுக்கி பிடிக்கணும்…

BGM


Notes : Idhudhaan Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. இதுதான் பாடல் வரிகள்.


மைலாஞ்ஜியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்திஆனந்த் அரவிந்தாக்ஷன் & ஷாஷா திருப்பதிசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Mayilaanjiye Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…

BGM

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : சாஞ்சி பாரடி…
சாஞ்சே போனேன்டி…
கன்னத்தோட கன்னம் வச்சி…
கிச்சு கிச்சு மூட்டி போரடி…

ஆண் : நீ சொன்ன வார்த்த…
நான் சேர்த்து வச்சேன்…
என் மூச்சு காத்தா…
நான் மாத்தி வச்சேன்…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

BGM

ஆண் : உள்ளங்கைகுள்ள முகம் வச்சி ஒட்டி கொள்ள…
காலம் பூரா நீ வேணும்…
உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள…
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்…

பெண் : ஹான்… ஹா… நீயில்லா நான்தான்னா…
நெனைச்சி நான் பாக்கல…
கைகள் கோக்கனும் தெனம்…
மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன்…
கூசுதா… நடுங்குதா…

ஆண் : மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து…
இதமா நெஞ்சோடு வைப்பேனே…
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்…
உசுரே என் தாரம் வா நீ தானே…

ஆண் : எஞ் சிறு மைலாஞ்ஜியே…
மயங்கிடு நெஞ்சுக்குள்ள…
எஞ் சிறு கள்ளாலியே…
தவிக்குது உள்ளுக்குள்ள…

ஆண் : எனக்கென நீ இருந்தா…
ஒருத்தரும் தேவை இல்ல…
மடியில தூங்க செஞ்சா…
சாகவும் பயமே இல்ல…

ஆண் : ஆத்தி யாரடி…
ஏக்கம் தாரடி…
கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…

ஆண் : கொத்து கொத்தா ஆச வச்சி…
மொத்தமாக தூக்கி போரடி…


Notes : Mayilaanjiye Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Dhamayanthi. மைலாஞ்ஜியே பாடல் வரிகள்.


ஆழி சூழ்ந்த உலகிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஸ்ரீகாந்த் ஹரிஹரன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Aazhi Soozhndha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

BGM

ஆண் : உறங்கும் போதும் இவனின் கவனம்…
உறங்கி போகாது…
கனவில்கூட காவல் செய்யும்…
கடமை மறவாது…

ஆண் : உலகமே இவளென இவன்…
வாழும் அழகை பாரடா…
மகள் என வளர்க்கிறான்…
இவன் உயரம் குறைந்த தாயடா…

ஆண் : இவனின் அன்பை அளந்திட…
எந்த மொழியும் போதாது…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…

ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…

ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…

ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…


Notes : Aazhi Soozhndha Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ஆழி சூழ்ந்த உலகிலே பாடல் வரிகள்.


உசுரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சுதர்சன் அசோக் & ஜோதி புஷ்பாசித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Usure Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…
உசுரே விட்டு போயிட்ட…
ஓ… மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருக்கிறதா…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

பெண் : ஹா… ஆஅ… ஆ… ஆ…
ஹா… ஆஅ… ஆ… ஆ…

BGM

ஆண் : யாரோடும் பேசமா…
ஒரு தீவ போல…
நாள் எல்லாம் வாழ்ந்தேனே…
வேரோடு சேராத…
ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே… ஹோ… ஓஓ…

ஆண் : அடி தன்னோட இறகெல்லாம்…
கண்முன்னே விழுந்தாலும்…
பறவைகள் தேடாதே…
அடி ஆனாலும் இறகுக்கு…
பறவையின் ஞாபகம்…
எப்போதும் போகாதே…

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : வழிகளும் மறையல…

குழு (ஆண்கள்) : ஏனோ…

ஆண் : அழுதிட தோனல…

குழு (ஆண்கள்) : நானோ…

ஆண் : செதறிய கண்ணாடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : தனி மரம் நானடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எனக்கினி யாரடி…

குழு (ஆண்கள்) : போ போ…

ஆண் : எவளும் வேணான்டி…

ஆண் : உசுரே விட்டு போயிட்ட…
மனச வெட்டி வீசிட்ட…

ஆண் : நீ தந்த காயமும்…
நீ தந்த கோபமும்…
என்னோடு இருக்கிறதே… ஹோ… ஓஓ…
நான் தந்த பாசமும்…
நான் கொண்ட நேசமும்…
உன்னோடு இருகிறதா…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : என் உசுரே… ஏ…
என் மனசே…

ஆண் : தந்தா ராரா… தந்தா ராரா…
தந்தா ராரா… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : ஹோ… ஓ ஓ… ஓஓ…
ஓ… உசுரே…


Notes : Usure Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. உசுரே பாடல் வரிகள்.