Category Archives: நீ வருவாய் என

ஒரு தேவதை வந்துவிட்டாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்ஹரிஹரன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Oru Devathai Song Lyrics in Tamil


ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…

BGM

ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…

ஆண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க…
நூலில் பூவை போல சேர்ந்திருக்க…
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க…
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க…
புன்னகையில் பூ பறிக்க…

ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…

BGM

ஆண் : பூக்கும் செடியை எல்லாம்…
சிரிக்கும் பூவை எல்லாம்…
உன் பெயரை கேட்டிருந்தேன்…

ஆண் : எட்டு திசையும் சேர்த்து…
ஒற்றை திசையை மாற்றி…
உன் வரவை பார்த்திருந்தேன்…

ஆண் : கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம்…
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்…

ஆண் : உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன்…
உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன்…

ஆண் : என் நிழலில் நீ நடக்க…
என் உயிரில் உன்னை வைத்தேன்…

BGM

ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…

BGM

ஆண் : ரோஜா செடிகள் நட்டு…
உயிரை நீராய் விட்டு…
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்…

ஆண் : வெட்கம் வீசும் ரோஜா…
வெளியில் வரும் நேரத்தில்…
வெயிலுக்கு தடை விதிப்பேன்…

ஆண் : அன்பே உன் பாதங்கள் நோகும் என்று…
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்…
கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க…
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்…

ஆண் : என் நிழலில் நீ நடக்க…
என் உயிரில் உன்னை வைத்தேன்…

BGM

பெண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…

பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க…
நூலில் பூவை போல சேர்ந்திருக்க…
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க…
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க…
புன்னகையில் பூ பறிக்க…


Notes : Oru Devathai Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Ra. Ravishankar. ஒரு தேவதை வந்துவிட்டாள் பாடல் வரிகள்.


Parthu Parthu Song Lyrics in Tamil

பார்த்துப் பார்த்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Parthu Parthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…

குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

BGM

ஆண் : கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென…
தினம்தினம் சேகரித்தேன்…
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென…
வாசகனாகிவிட்டேன்…

ஆண் : கவிதை நூலோடு கோலப் புத்தகம்…
உனக்காய் சேமிக்கிறேன்…
கனவில் உன்னோடு என்ன பேசலாம்…
தினமும் யோசிக்கிறேன்…

ஆண் : ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்…
என் வாசல் பார்க்கிறேன்…

குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

BGM

ஆண் : எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்…
நிலவுக்கும் ஜோடியில்லை…
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட…
கவிதைக்கும் கால்களில்லை…

ஆண் : உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்…
அதிலே நீ யாரடி…
சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன்…
எங்கே உன் காலடி…

ஆண் : மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து…
இரு விழிகள் தேய்கிறேன்…

குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…

ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…

BGM

ஆண் : பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…

BGM

ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…

குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…
நீ வருவாய் என நீ வருவாய் என…


Notes : Parthu Parthu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Ra. Ravishankar. பார்த்துப் பார்த்து பாடல் வரிகள்.


அதிகாலையில் சேவலை எழுப்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

ஆண் : இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை…
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை…
ஏன் தாமரை பூக்கவில்லை…

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

குழு : மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்…
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்…
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்…
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்…

BGM

பெண் : காலைப் பொழுதில் காதல் கூடாது…
குழு : கூடாது…
ஆண் : காதல் பொழுதில் வேலைக் கூடாது…
குழு : கூடாது கூடாது…

ஆண் : ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது…
குழு : கூடாது கூடாது…

ஆண் : கோவை கனி இதழ் மூடக் கூடாது…
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது…

BGM

ஆண் : அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது…
பெண் : உறங்கும் போதும் உயிரே…
உன்னைப் பிரியக் கூடாது…

BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

ஆண் : மாலைத் தென்றல் வீசக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : மாநிலச் செய்திகள் கேட்க கூடாது…
குழு : கூடாது கூடாது…

பெண் : சூரியன் மேற்கை பார்க்க கூடாது…
குழு : கூடாது…
ஆண் : சூரிய காந்தியும் பார்க்க கூடாது…
குழு : கூடாது கூடாது…

பெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது…
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது…

BGM

பெண் : மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது…
ஆண் : இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது…

BGM

பெண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

பெண் : என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்…
என் வளையொலி கொலுசுகள் திருடியது யார்…
இரு விழிகளில் கலந்தது யார்…

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று கெஞ்சியவன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சியவன்…

BGM


Notes : Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Pa.Vijay. அதிகாலையில் சேவலை எழுப்பி பாடல் வரிகள்.


பூங்குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅருண்மொழி & ஹரிணிஎஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Poonkuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

பெண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற…
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா…
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்…
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா…

பெண் : இளமனசுக்குள் கனவுகளை…
இறக்கி வச்சது நெனப்பிருக்கா…
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே…
மீண்டும் சேர வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி…
நான் ரசித்தது பிடிச்சிருக்கா…
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்…
நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா…

ஆண் : திறந்திருக்கிற மனசுக்குள்ளே…
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா…
வாசம் போக பிடிச்சிருக்கா…
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பனிக்காற்றும் பிடிச்சிருக்கு…

ஆண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு…


Notes : Poonkuyil Pattu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Viveka. பூங்குயில் பாட்டு பாடல் வரிகள்.