பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ரா. ரவிசங்கர் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். ஏ. ராஜ்குமார் | நீ வருவாய் என |
Parthu Parthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…
ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…
குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…
ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…
—BGM—
ஆண் : கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென…
தினம்தினம் சேகரித்தேன்…
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென…
வாசகனாகிவிட்டேன்…
ஆண் : கவிதை நூலோடு கோலப் புத்தகம்…
உனக்காய் சேமிக்கிறேன்…
கனவில் உன்னோடு என்ன பேசலாம்…
தினமும் யோசிக்கிறேன்…
ஆண் : ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்…
என் வாசல் பார்க்கிறேன்…
குழு : நீ வருவாய் என… நீ வருவாய் என…
ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…
—BGM—
ஆண் : எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்…
நிலவுக்கும் ஜோடியில்லை…
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட…
கவிதைக்கும் கால்களில்லை…
ஆண் : உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்…
அதிலே நீ யாரடி…
சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன்…
எங்கே உன் காலடி…
ஆண் : மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து…
இரு விழிகள் தேய்கிறேன்…
குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…
ஆண் : பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்…
நீ வருவாய் என…
—BGM—
ஆண் : பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்…
நீ வருவாய் என…
—BGM—
ஆண் : தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்…
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்…
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்…
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்…
குழு : நீ வருவாய் என நீ வருவாய் என…
நீ வருவாய் என நீ வருவாய் என…
Notes : Parthu Parthu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Ra. Ravishankar. பார்த்துப் பார்த்து பாடல் வரிகள்.