பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ரா. ரவிசங்கர் | ஹரிஹரன் & கே.எஸ். சித்ரா | எஸ். ஏ. ராஜ்குமார் | நீ வருவாய் என |
Oru Devathai Song Lyrics in Tamil
ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…
—BGM—
ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…
ஆண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க…
நூலில் பூவை போல சேர்ந்திருக்க…
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க…
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க…
புன்னகையில் பூ பறிக்க…
ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…
—BGM—
ஆண் : பூக்கும் செடியை எல்லாம்…
சிரிக்கும் பூவை எல்லாம்…
உன் பெயரை கேட்டிருந்தேன்…
ஆண் : எட்டு திசையும் சேர்த்து…
ஒற்றை திசையை மாற்றி…
உன் வரவை பார்த்திருந்தேன்…
ஆண் : கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம்…
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்…
ஆண் : உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன்…
உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன்…
ஆண் : என் நிழலில் நீ நடக்க…
என் உயிரில் உன்னை வைத்தேன்…
—BGM—
ஆண் : ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…
—BGM—
ஆண் : ரோஜா செடிகள் நட்டு…
உயிரை நீராய் விட்டு…
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்…
ஆண் : வெட்கம் வீசும் ரோஜா…
வெளியில் வரும் நேரத்தில்…
வெயிலுக்கு தடை விதிப்பேன்…
ஆண் : அன்பே உன் பாதங்கள் நோகும் என்று…
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்…
கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க…
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்…
ஆண் : என் நிழலில் நீ நடக்க…
என் உயிரில் உன்னை வைத்தேன்…
—BGM—
பெண் : ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே…
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே…
பெண் : நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க…
நூலில் பூவை போல சேர்ந்திருக்க…
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க…
சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க…
புன்னகையில் பூ பறிக்க…
Notes : Oru Devathai Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Ra. Ravishankar. ஒரு தேவதை வந்துவிட்டாள் பாடல் வரிகள்.