Category Archives: ஆனந்த பூங்காற்றே

பாட்டுக்கு பாலைவனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மாஸ்டர் ரோஹித்தேவாஆனந்த பூங்காற்றே

Paatukku Paalaivanam Song Lyrics in Tamil


ஆண் : ஆஅ ஆஅ… தானே நானே நான நானா…
தானே நானே நான நானே… தந்தனா நானே னா…

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி…
மொட்டு மொட்டு முல்லைமொட்டு மெட்டுக்கள் திறக்குதடி…
விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி…
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் தட்டை ஆடுதடி…

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில…
பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்சமத்தில் தாவுதடி…
மோகத்துக்குள் உள்ளதெல்லாம் தாளத்துக்குள் சுத்துதடி…

ஆண் : பாடல் என்பதொரு மாயமாகுமடி…
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…

ஆண் : ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ…
ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ…

ஆண் : கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா…
கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா…

ஆண் : ச ச நீ த பா நி நி த ப ம…
ப ம க ப ம க ரி ச…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

குழு : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

BGM

ஆண் : பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு…
குழு : மழை வந்து பாடும் பாட்டு…

ஆண் : காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு…
குழு : துளை மூங்கில் பாடும் பாட்டு…

ஆண் : துவைக்கின்ற மனிதன் கலைப்புக்கு மருந்து…
சோ வென்னும் இசை பாட்டு…
விதைக்கின்ற மனிதன் அலுப்புக்கும் மருந்து…
அவன் சொல்லும் நேர் பாட்டு…

ஆண் : காரா பசு கழுத்துமணி…
கன்றுக்கு புது பாட்டு…
பள்ளிகூடத்தின் கடைசிமணி…
பையனுக்கு இசை பாட்டு…

ஆண் : அட சுத்தி வரும் பூமியில் சுத்தி சுத்தி பாட்டு…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

BGM

ஆண் : பிறந்ததும் பிள்ளை கேட்க்கும் முதல் பாட்டு…
குழு : பெற்ற தாயார் பாடும் தாலாட்டு…

ஆண் : வளர்ந்ததும் நெஞ்சில் பாயும் ஒரு பாட்டு…
குழு : அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு…

ஆண் : இருமனம் இணைந்து ஒரு திருமணம் புரிகையில்…
ஊஞ்சலில் மணப் பாட்டு…
ஐ இரண்டு மாதத்துக்கு கை ரெண்டில் வளைபோடும்…
நலுங்குக்கு ஒரு பாட்டு…

ஆண் : பிள்ளை வளர பேரன் வளர…
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு…
கடைசியிலும் ஒலித்திடுமே…
கால்கள் இழந்த கட்டில் பாட்டு…

ஆண் : அட தொடக்கமும் பாட்டில் முடிப்பதும் பாட்டு…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி…
மொட்டு மொட்டு முல்லைமொட்டு மெட்டுக்கள் திறக்குதடி…
விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி…
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் கட்ட ஆடுதடி…

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில…
பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்ச்சமத்தில் தாவுதடி…
மோகத்துக்குள் உள்ளதெல்லாம் தாளத்துக்குள் சுத்துதடி…

ஆண் : பாடல் என்பதொரு மாயமாகுமடி…
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

குழு : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்… ம்ம்…


Notes : Paatukku Paalaivanam Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. பாட்டுக்கு பாலைவனம் பாடல் வரிகள்.


யக்கா யக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுவர்ணலதாதேவாஆனந்த பூங்காற்றே

Yekka Yekka Song Lyrics in Tamil


குழு : யக்கா யக்கா… யக்கா யக்கா…
யக்கா யக்கா… யக்கா யக்கா…

BGM

பெண் : யக்கா யக்கா… யக்கா யக்கா…
ஒரு மத்தியானம் மாமன் பொண்ணு மல்லாந்து படுத்திருக்கா…
சொக்கா சொக்கா…
ஒரு ஈ காக்கா குஞ்சு இல்லை தானாக தனிச்சிருக்கா…

பெண் : ஓ… வாச பக்கம் பூட்டு போட்டு…
கொல்லப்பக்கம் காத்து நிக்கா…
ஏற்பாடு எல்லாம் பக்கா…
இம்முன்நேரம் சொல்லு கொக்கா…
தண்ணி பானை தலைக்கிமேல…
தாகம் எல்லாம் உம்மமேல…

பெண் : யக்கா யக்கா… ஏய் யக்கா யக்கா…

BGM

ஆண் : மச்சம் பெருத்தவளே மல்லுகட்டாதே…
உன்னை அடக்கி வைக்க சத்து பத்தாதே…

BGM

பெண் : மொட்டு முளைவிடும்போது மூடி வைக்காதே…
என்ன உசுப்பி விட்டு ஓடிபோகாதே…

ஆண் : பச்சை முட்டை குடிச்சி பார்த்தேன்…
பாதாம் பருப்பும் தின்னும் பார்த்தேன்…
லட்ச கெட்ட குயிலே உனது…
இச்சை தீர வழியே இல்லை…

பெண் : ஆனாலும் உன்ன விட்டா…
ஆனா யாரும் போடவும் இல்லை…
யக்கா யக்கா… யக்கா யக்கா…

BGM

பெண் : வாச தொறந்து வச்சும் காத்த காணாமே…
ஆசை தொறந்து வச்சும் ஆர்வம் காணாமே…

BGM

ஆண் : வாழைமரத்தில் வண்டு ஊஞ்சல் கட்டாதே…
முள்ளில் கிணறு வெட்டி நீயும் முட்டாதே… ஏ…

பெண் : கள்ள புழிஞ்சு எண்ணெய் எடுப்பேன்…
வெள்ளி கிடைச்சா விடவேமாட்டேன்…
பார்வையாள புழிய போறேன்…
பாலும் தேனா வழிய போறேன்…

ஆண் : அம்மம்மா ஆள விடம்மா…
பொண்ணு இல்லாத கிரகம் போறேன்…

ஆண் : யக்கா மக்கா… அட யக்கா மக்கா…
ஒரு ராசாத்தி என்ன எண்ணி தானாக தனிச்சிருக்கா…
யக்கா மக்கா…
நானும் முத்தாடத்தான் அவ முள் மேல தவமிருக்கா…

ஆண் : ஆ கண் வழியே உசுர விட்டு…
காதை வழி காத்து நிற்க்கா…

ஆண் : ஆளாகி ஆறே மாசம் நானா கேட்டா நல்லாருக்கா…
ஓரம் சாரம் போவோம்முன்னா ஊரு கண்ணு நம்ம மேலே…

குழு : யக்கா யக்கா… யக்கா யக்கா…
யக்கா யக்கா… யக்கா யக்கா…


Notes : Yekka Yekka Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. யக்கா யக்கா பாடல் வரிகள்.


சோலைக்குயில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஆனந்த பூங்காற்றே

Solai Kuyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : தானே தானா… ராரரி நானா… ம்…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…

பெண் : சோலைகுயில் பாடும்…
ஆண் : ஹிஹீம்ம்… அப்படியில்லையே…

ஆண் : தான்னனன நானா…
நான்ன னன நானா…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
ஆண் : ம்ம்… அப்படித்தான்…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…

BGM

ஆண் : கொட்டும் மழை முடிந்த பிறகும்…
கொடிகளில் இலையில் இருந்து…
சொட்டுகின்ற மழையின் துளிகள்…
தாளகதி செல்லுமே அதை கண்டு தெளி மனமே…

பெண் : குடங்களை குளத்தில் நிறைத்து…
குமரிகள் நடக்கும் பொழுது…
குடத்துக்குள் தளும்பும் அலைகள்…
சப்தஸ்வரம் சொல்லுமே…

ஆண் : நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறொன்றோ…
பறைவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ…

பெண் : பெண்ணின் கையேடு வளையொலி சங்கீதம்…
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்…

ஆண் : அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள்…
உனக்கு சொல்லி தரவில்லையா…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…

BGM

ஆண் : துள்ளி வரும் குழந்தை எடுத்து…
அள்ளி வைத்து அணைக்கும்போது…
பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது…
சின்ன சுகம் அல்லவா அது நெஞ்சிக்கழகல்லவா…

ஆண் : இதயங்கள் எரியும் பொழுது…
இதயத்தை புரிந்த ஒருத்தி…
இரு விழி விரல் நனைப்பது…
சின்ன சுகமல்லவா…

ஆண் : சுற்றமெல்லாம் போன பின்னும்…
தனிமைதான் சின்ன சுகம்…
வெண்ணிலவு போன பின்னும்…
வெட்டவெளி சின்ன சுகம்…

பெண் : இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்…
பிள்ளை சந்தோசம் சோகத்திலும் சின்ன சுகம்…

ஆண் : ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது…
இசை இசை அல்லவா…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்… ம்ம்ம்…


Notes : Solai Kuyil Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. சோலைக்குயில் பாடும் பாடல் வரிகள்.


மீனாட்சி மீனாட்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவா & சபேசன்தேவாஆனந்த பூங்காற்றே

Meenatchi Meenatchi Song Lyrics in Tamil


ஆண் : ஆண்டாளு…

BGM

ஆண் : ஏண்ணா அது அண்ணாநகர்ல இருக்குதுன்னா…
மச்சி நான் சாமிய கூப்பிடுறேன்டா…
கூப்புடு கூப்புடு…

ஆண் : ஆண்டாளுக்கு பெருமாள் துணை…
பார்வதிக்கு சிவனார் துணை…
அந்த வள்ளிக்கு முருகன் துணை…
லோக்கல் முனியம்மாவுக்கு…
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை…
நம்ப அண்ணனுக்கு யார் துணை…

ஆண் : கரெக்டா பாடுனன்னா…

குழு : தானனன்னா தானனன்னா தானனன்னா…
தானனன்னா தானனன்னா தானனன்னா…
ஆண் : போடு…

குழு : தானனன்னா தானனன்னா தானனன்னா…
தானனன்னா தானனன்னா தானனன்னா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…

BGM

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

BGM

ஆண் : சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்…
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்…

BGM

ஆண் : மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகருதான்…
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க…
காலேஜ் பொண்ணுங்கதான்…

ஆண் : அண்ணன் கை லக்கு…
நீ வுட்டுக்கம்மா லுக்கு…
லைஃப்யின்னா புக்கு…
அதை புரட்டினாதான் கிக்கு…

ஆண் : கிக்குயின்னா கிக்கு…
பெக்கு போட்ட கிக்கு…
தொக்குன்னாக்கா தொக்கு…
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…
ஆண் : யம்மா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…

BGM

ஆண் : வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான்…
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்…

BGM

ஆண் : பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா…
புருஷன் அணைக்கத்தான்…
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா…
ஏது உலகந்தான்…

ஆண் : அத்தை பெத்த சிட்டு…
நீ ஒத்தை குழா புட்டு…
பனாரஸு பட்டு…
அதை கட்டிக்கடி தொட்டு…

ஆண் : கட்டுன்னா கட்டு…
கரன்சி நோட்டு கட்டு…
துட்டுன்னாக்கா துட்டு…
ரிசர்வ் பேங்கு துட்டு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…

ஆண் : மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…

குழு : ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா…
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா…


Notes : Meenatchi Meenatchi Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. மீனாட்சி மீனாட்சி பாடல் வரிகள்.


Semeena Song Lyrics in Tamil

செம்மீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஆனந்த பூங்காற்றே

Semeena Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM

ஆண் : இருளைப் பின்னிய குழலோ…
இருவிழிகள் நிலவின் நிழலோ…
பொன் உதடுகளின் சிறுவரியில்…
என் உயிரைப் புதைப்பாளோ…

ஆண் : ரவிவர்மன் தூரிகை எழுத்தோ…
இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ…
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்…
நான் உருண்டிட மாட்டேனோ…

ஆண் : பூமி கொண்ட பூவையெல்லாம்…
இரு பந்தாய் செய்தது யார் செயலோ…
சின்ன ஓவியச் சிற்றிடையோ…
அவள் சேலை கட்டிய சிறு புயலோ…

ஆண் : என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்…
அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்…
பெண் : தாரரரா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM

ஆண் : அவளே என் துணையானால்…
என் ஆவியை உடையாய் நெய்வேன்…
அவள் மேனியில் உடையாய்த் தழுவி…
பல மெல்லிய இடம் தொடுவேன்…

ஆண் : மார்கழி மாதத்து இரவில்…
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்…
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை…
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்…

ஆண் : மோகம் தீர்க்கும் முதலிரவில்…
ஒரு மேக மெத்தை நான் தருவேன்…
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்…
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்…

ஆண் : அவள் நடந்தாலோ…
இடை அதிர்ந்தாலோ…
குழல் உதிர்க்கிற பூவுக்கும்…
பூஜைகள் புரிவேன்…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM


Notes : Semeena Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. செம்மீனா பாடல் வரிகள்.