பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சுஜாதா மோகன் | தேவா | ஆனந்த பூங்காற்றே |
Solai Kuyil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தானே தானா… ராரரி நானா… ம்…
ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பெண் : சோலைகுயில் பாடும்…
ஆண் : ஹிஹீம்ம்… அப்படியில்லையே…
ஆண் : தான்னனன நானா…
நான்ன னன நானா…
பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
ஆண் : ம்ம்… அப்படித்தான்…
ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…
பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…
ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…
—BGM—
ஆண் : கொட்டும் மழை முடிந்த பிறகும்…
கொடிகளில் இலையில் இருந்து…
சொட்டுகின்ற மழையின் துளிகள்…
தாளகதி செல்லுமே அதை கண்டு தெளி மனமே…
பெண் : குடங்களை குளத்தில் நிறைத்து…
குமரிகள் நடக்கும் பொழுது…
குடத்துக்குள் தளும்பும் அலைகள்…
சப்தஸ்வரம் சொல்லுமே…
ஆண் : நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறொன்றோ…
பறைவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ…
பெண் : பெண்ணின் கையேடு வளையொலி சங்கீதம்…
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்…
ஆண் : அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள்…
உனக்கு சொல்லி தரவில்லையா…
ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…
—BGM—
ஆண் : துள்ளி வரும் குழந்தை எடுத்து…
அள்ளி வைத்து அணைக்கும்போது…
பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது…
சின்ன சுகம் அல்லவா அது நெஞ்சிக்கழகல்லவா…
ஆண் : இதயங்கள் எரியும் பொழுது…
இதயத்தை புரிந்த ஒருத்தி…
இரு விழி விரல் நனைப்பது…
சின்ன சுகமல்லவா…
ஆண் : சுற்றமெல்லாம் போன பின்னும்…
தனிமைதான் சின்ன சுகம்…
வெண்ணிலவு போன பின்னும்…
வெட்டவெளி சின்ன சுகம்…
பெண் : இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்…
பிள்ளை சந்தோசம் சோகத்திலும் சின்ன சுகம்…
ஆண் : ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது…
இசை இசை அல்லவா…
ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…
பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…
ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்… ம்ம்ம்…
Notes : Solai Kuyil Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. சோலைக்குயில் பாடும் பாடல் வரிகள்.