பெண் : அன்றில் பறவை இரட்டைப் பிறவி… ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி… பிரியாதே… விட்டுப் பிரியாதே…
பெண் : கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி… ஒரு விழி அழுதால் இருவிழி அருவி… பொழியாதோ… அன்பே வழியாதோ…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்…
பெண் : ஒருவர் தூங்கும் தூக்கத்தில்… இருவர் கனவுகள் காணுகிறோம்… ஒருவர் வாங்கும் சுவாசத்தில்… இருவர் இருதயம் வாழுகிறோம்… தாவிக்கொள்ள மட்டும்தான்… தனித்தனியே தேடுகின்றோம்…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ம ம ம க க னி னி ச க ச க… ச க ச க னி னி ச க ம ச க ம… ச க ப ச னி னி ச னி ச க ம ப… ச ம ப னி ச க க ரி க ச ரி க ம ப…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி… ச ச னி ச க ம ப னி த ப ம க ம… ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
பெண் : ரி ரி ரி ச ச னி ச… ரி ரி ச ச ரி ரி னி னி ச ச… க ரி ச னி சி க ரி ச னி த… னி த ப ம க னி ச க ச க… ம க ம ப த ப ம னி ம ப ந… ச க ரி ச க ரி ச னி ச னி த… ப ம க ரி ச ரி ம…
பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா… கண்களுக்குச் சொந்தமில்லை… கண்களுக்குச் சொந்தமில்லை…
பெண் : கண்ணோடு மணியானாய் அதனால்… கண்ணைவிட்டுப் பிரிவதில்லை… நீ என்னைவிட்டு பிரிவதில்லை…
Notes : Kannuodu Kaanbadhalam Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. கண்ணோடு காண்பதெல்லாம்பாடல் வரிகள்.
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்… குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்… அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…
ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ… பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ…
பெண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்… வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்… துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்… குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்…
ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…
—BGM—
பெண் : ஓ… ஹோ…
—BGM—
பெண் : ஓ… ஹோ…
—BGM—
பெண் : ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்… நறுவாசமுள்ள பூவை பார்… பூவாசம் அதிசயமே… அலைக்கடல் தந்த மேகத்தில்… சிறு துளிக்கூட உப்பில்லை… மழை நீரும் அதிசயமே…
ஆண் : மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்… மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே… உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்… உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்… நினைத்தால் நினைத்தால் அதிசயமே…
பெண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்… ஓ… ஹோ… பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்… ஓ… ஹோ…
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்…
பெண்: வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…
ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்…
பெண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்…
ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…
—BGM—
ஆண் : பெண்பால் கொண்ட சிறுதீவு… இரு கால்கொண்டு நடமாடும்… நீதான் என் அதிசயமே… உலகில் ஏழல்ல அதிசயங்கள்… வாய்பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே…
ஆண் : வான் மிதக்கும் உன் கண்கள்… தேன் தெறிக்கும் கன்னங்கள்… பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே…
ஆண் : நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே… நகம் என்ற கிரீடம் அதிசயமே… அசையும் வளைவுகள் அதிசயமே…
ஆண் : கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே… உண்டான காதல் அதிசயம்…
பெண் : ஓ… ஹோ…
பெண் : பதினாறு வயதான பருவத்தில்… எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்…
ஆண் : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்…
பெண் : அதிசயம்…
ஆண் : வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்…
பெண் : அதிசயம்…
ஆண் : துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல்…
பெண் : அதிசயம்…
ஆண் : குருநாதர் இல்லாத குயில் பாட்டு…
பெண் : அதிசயம்…
ஆண் : அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்…
—BGM—
பெண் : ஓ… ஹோ…
—BGM—
பெண் : ஓ… ஹோ…
Notes : Poovukkul Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்.
ஆண் : பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்… அடடா பிரம்மன் கஞ்சனடி… சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்… ஆஹா… அவனே வள்ளலடி…
ஆண் : மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து… ரவிவர்மன் எழுதிய வதனமடி… நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்… சிற்பிகள் செதுக்கிய உருவமடி…
ஆண் : இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்… நீதான் நீதான் அழகியடி… இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து… என்னை வதைப்பது கொடுமையடி…
ஆண் : அன்பே அன்பே கொல்லாதே… கண்ணே கண்ணை கிள்ளாதே…
—BGM—
குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த பூவே பூவே… அவள் கூந்தல் மணம் சொல்வாயா… கொடுத்து வைத்த நதியே நதியே… அவள் குளித்தச் சுகம் சொல்வாயா…
குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த கால்கொலுசே… கால் அளவைச் சொல்வாயா… கொடுத்து வைத்த மணியே… மார் அழகைச் சொல்வாயா…
—BGM—
ஆண் : அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி… அங்கே உனக்கொரு வீடு செய்வேன்… உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு… உயிருக்கு உயிரால் உனையிடுவேன்…
—BGM—
ஆண் : மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து… மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்… தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது… நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்…
ஆண் : பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக… பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்… தேவதை குளித்த துளிகளை அள்ளித்… தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்…