பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | நாகூர் இ.எம்.ஹனிஃபா & மனோ | இளையராஜா | செம்பருத்தி |
Natta Nadu Kadal Song Lyrics in Tamil
ஆண் : கடலிலே தனிமையில் போனாலும்…
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்…
அலைகளில் தத்தளித்தாலும்…
அவள் நினைவில் முக்குளிப்பேனே…
அடியே அமுதே இதுவே போதும்…
—BGM—
ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…
ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…
ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்…
விட்டு விலகாது உயிர் காதலே…
கரையிலே கன்னி துடித்தாளே…
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே…
இதுதான் காதலில் இடைவேளை…
—BGM—
ஆண் : வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்…
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்…
ஆண் : சுத்தி வரும் புயலென்ன…
கொட்டுகின்ற இடியென்ன…
அன்பு விளக்கென்றும் எரியும்…
ஆண் : தெய்வத்திற்கு திரையென்ன…
காதலுக்கு மறைவென்ன…
உங்களுக்கு என்று புரியும்…
ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று…
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்…
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்…
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்…
அடியே அமுதே வருந்தாதே…
—BGM—
ஆண் : விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்…
கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்…
ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று…
முத்தெடுக்கும் நேரம் இன்று…
சித்திரமே செப்புக் குடமே…
ஆண் : கட்டும் உண்டு காவலும் உண்டு…
நம்மை என்ன செய்யும் இன்று…
நித்திலமே முத்துரதமே…
ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…
ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…
Notes : Natta Nadu Kadal Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நட்ட நடு கடல் பாடல் வரிகள்.