Category Archives: செம்பருத்தி

செம்பருத்தி – Chembaruthi (1992)

நட்ட நடு கடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநாகூர் இ.எம்.ஹனிஃபா & மனோஇளையராஜாசெம்பருத்தி

Natta Nadu Kadal Song Lyrics in Tamil


ஆண் : கடலிலே தனிமையில் போனாலும்…
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்…
அலைகளில் தத்தளித்தாலும்…
அவள் நினைவில் முக்குளிப்பேனே…
அடியே அமுதே இதுவே போதும்…

BGM

ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…

ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…

ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…

ஆண் : பிரிந்தது உயிரல்ல உடல்தான்…
விட்டு விலகாது உயிர் காதலே…
கரையிலே கன்னி துடித்தாளே…
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே…
இதுதான் காதலில் இடைவேளை…

BGM

ஆண் : வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்…
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்…

ஆண் : சுத்தி வரும் புயலென்ன…
கொட்டுகின்ற இடியென்ன…
அன்பு விளக்கென்றும் எரியும்…

ஆண் : தெய்வத்திற்கு திரையென்ன…
காதலுக்கு மறைவென்ன…
உங்களுக்கு என்று புரியும்…

ஆண் : ஆற்றிலே இக்கரையில் நின்று…
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்…
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்…
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்…
அடியே அமுதே வருந்தாதே…

BGM

ஆண் : விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்…
கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்…

ஆண் : உப்பெடுக்கும் நேரம் ஒன்று…
முத்தெடுக்கும் நேரம் இன்று…
சித்திரமே செப்புக் குடமே…

ஆண் : கட்டும் உண்டு காவலும் உண்டு…
நம்மை என்ன செய்யும் இன்று…
நித்திலமே முத்துரதமே…

ஆண் : நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…

ஆண் : நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…

ஆண் : எட்டி எட்டிப் போனாலும்…
கெட்டு மனம் போகாது…
அற்புதமே அன்னக்கிளியே…


Notes : Natta Nadu Kadal Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நட்ட நடு கடல் பாடல் வரிகள்.


சளக்கு சளக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Chalakku Chalakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…
சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

BGM

ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட நான் வாழ வேனும்…
இல்லாம வாழ்ந்தென்ன லாபம்…

பெண் : உன் கையில் பூ மாலை நான் வாங்க வேணும்…
வாங்காம தீராது தாகம்…

ஆண் : குத்தாலம் தேவை இல்ல…
நீ சிரிச்ச சாரல் வரும்…

பெண் : தென்காசி தேவை இல்ல…
நீ இருந்த தூரல் வரும்…

ஆண் : வண்ண வண்ண செம்பருத்தி என்ன சேரும்…
பெண் : நீயும் தொட சொல்லாமலே தேனும் ஊரும்…

ஆண் : வலை ஓசை அலை ஓசை…
அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம்…

பெண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

ஆண் : ஓய்… சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

பெண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

BGM

பெண் : பூ மாலை போடாம பாய் போட வேணாம்…
என்னால ஆகாது ஆமா…

ஆண் : இல்லேனு சொல்லாம நீயாக வாம…
மாட்டேனு சொல்லாம தாம…

பெண் : பொல்லாத எண்ணமெல்லாம்…
நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்…

ஆண் : இப்போது வெட்கம் என்ன…
கொஞ்ச நேரம் ஓதி வைய்…

பெண் : கொஞ்சம் பொறு காதில் விழும் கெட்டி மேளம்…
ஆண் : மேளம் வந்தால் கேட்டுக்கலாம் கட்டில் தாளம்…

பெண் : ஒரு நாலு திரு நாலு…
அப்போ நித்தம் நித்தம் பாட்டு சத்தம்…

ஆண் : சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…

பெண் : சந்தன பெட்டி சக்கர கட்டி…
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி…

ஆண் : அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே…
பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே…


Notes : Chalakku Chalakku Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. சளக்கு சளக்கு பாடல் வரிகள்.


நடந்தால் இரண்டடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெம்பருத்தி

Nadandhal Irandadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
படுத்தால் ஆறடி போதும்…
இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்…

ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…

ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…

BGM

ஆண் : இறக்கை உள்ள குஞ்சு இது…
கூடு ஒண்ணும் தேவையில்லை…
புத்தியுள்ள பிள்ளை இது…
கெட்டு நிற்கப்போவதில்லை…

ஆண் : தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா…
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா…

ஆண் : தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை…
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை…

ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன்தான்…
என்னடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…

ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…

BGM

ஆண் : ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை…
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை…

ஆண் : வெட்ட வெட்ட வாழைதான்…
அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்…
வெட்டி போட்ட மண்ணுதான்…
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்…

ஆண் : நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம்தான்…
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம்தான்…

ஆண் : கெட்டாலும் பட்டாலும் உன் பேரன்தான்…
என்னடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…

ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
படுத்தால் ஆறடிபோதும்…
இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோருக்கும் சொந்தம்…

ஆண் : அடி சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…
சொல்லடி ஞானப்பெண்ணே…
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே…

ஆண் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி…
நடந்தால் இரண்டடி…


Notes : Nadandhal Irandadi Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நடந்தால் இரண்டடி பாடல் வரிகள்.


பட்டுப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Pattu Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…

பெண் : மீண்டும் மீண்டும் வேண்டும்…
அணைத் ண்டி பார்க்கத் தூண்டும்…
அன்புத்தேனே உன்னைத்தானே…
சொந்தம் நானே சொந்தம் நானே…

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…

ஆண் : பட்டுப் பூவே…

BGM

ஆண் : கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா…
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா…

பெண் : காதலர் கைகள் படாமல் காதல் ஏதைய்யா…
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா…

ஆண் : இதழ்களின் மேலே இதழ்களினாலே…
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று…

பெண் : மன்னவனே என் மன்மதனே…
என்னைத் தொட்டு தொட்டு தழுவு…

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
பெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா…
ஆண் : பட்டுப் பூவே…

BGM

பெண் : மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே…
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே…

ஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே…
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இன்ப வேளையே…

பெண் : மது மொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்…
மலர் மழைத் தூவி அணைக்குது மஞ்சம்…

ஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி…
என்னைத் தொட்டு தொட்டு தழுவ…

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…
பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
கட்டி கலந்தாடி கவி பாட வா…

ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்…
அணைத்தாண்டி பார்க்கத் தூண்டும்…
அன்புத்தேனே உன்னைத்தானே…
சொந்தம் நானே சொந்தம் நானே…

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு…
ஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா…

ஆண் & பெண் : பட்டுப் பூவே…


Notes : Pattu Poove Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. பட்டுப் பூவே பாடல் வரிகள்.


நிலா காயும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மனோஇளையராஜாசெம்பருத்தி

Nila Kayum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

ஆண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

BGM

ஆண் : தென்றல் தேரில் நாம்தான் போகும் நேரம் பார்த்து…
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து…

பெண் : கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்…
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்…

ஆண் : நினைத்தால் இது போல் ஆகாததேது…
பெண் : அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது…

ஆண் : நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…

BGM

பெண் : மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட…
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட…

ஆண் : அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்…
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்…

பெண் : நடக்கும் தினமும் ஆனந்த யாகம்…
ஆண் : சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்…

பெண் : அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்…
அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

ஆண் : நிலா காயும் நேரம் சரணம்…
உலா போக நீயும் வரணும்…

பெண் : பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்…
காண்பவை யாவுமே தேன்…

ஆண் : அன்பே நீயே அழகின் அமுதே…
அன்பே நீயே அழகின் அமுதே…

பெண் : நிலா காயும் நேரம் சரணம்…
ஆண் : உலா போக நீயும் வரணும்…


Notes : Nila Kayum Song Lyrics in Tamil. This Song from Chembaruthi (1992). Song Lyrics penned by Vaali. நிலா காயும் நேரம் பாடல் வரிகள்.