Category Archives: அண்ணாமலை

Annamalai Annamalai Song Lyrics in Tamil

அண்ணாமல அண்ணாமல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஅண்ணாமலை

Annamalai Annamalai Song Lyrics in Tamil


BGM—-

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு…
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு…
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி…
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி…
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி…
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி…

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன்…

BGM

பெண் : நேசம் உள்ள மாமன் கொஞ்சம்…
நெருங்கி வரட்டுமே…
உன் நெத்தியிலே விழுந்த முடி…
என் மேல் விழட்டுமே…

ஆண் : ஈரத்தலை துவட்டும் துணி…
என் மேல் சிந்தட்டுமே…
உன் இடுப்பச் சுத்தி…
கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே…

பெண் : அழகான வீரனே…
அசகாய சூரனே…
கருப்பான வண்ணனே…
கலிகால கண்ணனே…

ஆண் : நாடகம் தொடங்கினால்…
நான் உந்தன் தொண்டனே…

பெண் : அண்ணாமல அண்ணாமல…
ஆண் : ஹோய்…
பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே…
ஆண் : ஹைய்யோ…
பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…

BGM

ஆண் : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்…
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்…

பெண் : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்…
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்…

ஆண் : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி…
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி…

பெண் : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி…
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி…
உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி…
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி…

பெண் : அண்ணாமல அண்ணாமல…
ஆண் : ஹா ஹா ஹா…
பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே…
ஆண் : ஹோ ஓ ஓ…
பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு…
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு…
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு…

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி…
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி…

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே…
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்…


Notes : Annamalai Annamalai Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. அண்ணாமல அண்ணாமல பாடல் வரிகள்.


வெற்றி நிச்சயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅண்ணாமலை

Vetri Nichayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெற்றி நிச்சயம்…
இது வேதசத்தியம்…
கொள்கை வெல்வதே…
நான் கொண்ட லட்சியம்…

ஆண் : என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்…
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்…
அடே நண்பா உண்மை சொல்வேன்…
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்…

ஆண் : வெற்றி நிச்சயம்…
இது வேதசத்தியம்…
கொள்கை வெல்வதே…
நான் கொண்ட லட்சியம்…

BGM

ஆண் : இமயமலை ஆகாமல்…
எனது உயிர் போகாது…
சூரியன் தூங்கலாம்…
எனது விழி தூங்காது…

ஆண் : வேர்வை மழை சிந்தாமல்…
வெற்றி மலர் பூவாது…
எல்லையைத் தொடும் வரை…
எனது கட்டை வேகாது…

ஆண் : ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே…
ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே…
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே…

ஆண் : அடே நண்பா உண்மை சொல்வேன்…
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்…

ஆண் : வெற்றி நிச்சயம்…
இது வேதசத்தியம்…
கொள்கை வெல்வதே…
நான் கொண்ட லட்சியம்…

BGM

ஆண் : இன்று கண்ட அவமானம்…
வென்று தரும் வெகுமானம்…
வானமே தாழலாம்…
தாழ்வதில்லை தன்மானம்…

ஆண் : மேடுபள்ளம் இல்லாமல்…
வாழ்வில் என்ன சந்தோஷம்…
பாறைகள் நீங்கினால்…
ஓடைக்கில்லை சங்கீதம்…

ஆண் : பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே…
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே…
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே…

ஆண் : அடே நண்பா உண்மை சொல்வேன்…
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்…

ஆண் : வெற்றி நிச்சயம்…
இது வேதசத்தியம்…
கொள்கை வெல்வதே…
நான் கொண்ட லட்சியம்…

ஆண் : என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்…
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்…
அடே நண்பா உண்மை சொல்வேன்…
சவால் வேண்டாம் உன்னை வென்றேன்…


Notes : Vetri Nichayam Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. வெற்றி நிச்சயம் பாடல் வரிகள்.


ஒரு பெண் புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்தேவாஅண்ணாமலை

Oru Pen Pura Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…

BGM

ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்…
தூக்கம் கண்ண சொக்குமே…
அது அந்த காலமே…

ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்…
கண்ணில் தூக்கம் இல்லையே…
அது இந்த காலமே…

ஆண் : என் தேவனே… ஓ… தூக்கம் கொடு…
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு…
பாலைவனம் கடந்து வந்தேன்…
பாதங்களை ஆறவிடு…

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…

BGM

ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா…
அன்று பாடம் படித்தேன்…
அது பழைய பழமொழி…

ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே…
இதை நெஞ்சில் நிறுத்து…
இது புதிய பழமொழி…

ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை…
பெண் பிள்ளையோ போகும் வரை…
விழி இரண்டும் காயும் வரை…
அழுதுவிட்டேன் ஆனவரை…

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…


Notes : Oru Pen Pura Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பெண் புறா பாடல் வரிகள்.


ரெக்கே கட்டி பரக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஅண்ணாமலை

Rekai Katti Parakuthudi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : தோள தட்டி பிடிக்கயிலே…
என்ன சுகம் கண்ணம்மா…
இந்த சுகம் எதில் இருக்கு…
இன்னும் கொஞ்சம் போவோமா…

ஆண் : அடடா பழகி கெடந்த…
பழைய நெனைப்பில…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…
ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

BGM

ஆண் : சரித்திரமே மாறி போச்சு…
மனசு மாறலையே…
என் சைக்கிள்க்கும் ஒனக்கு மட்டும்…
வயசு ஏறலையே…

பெண் : கோடி பணம் புகழ் இருக்குது…
நரைச்ச மாப்பிள்ளையே…

ஆண் : ஹோய்… ஹோய்…

பெண் : இன்னும் கொழுந்து வெத்தல மடிச்சி கொடுக்க…
குறும்பு போகலயே…

ஆண் : ஆன்… ரெண்டு பேரும் மெத்தை இட்டு…
அடி எத்தனை நாளாச்சு…

பெண் : பேரன் பேத்தி கொள்ளும் வயசில…
என்னது வீண் பேச்சு…

ஆண் : உயிர் இருக்கும் வரை இருக்கும்…
இது காமன் சொன்ன சொல்லாச்சு…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…

ஆண் : ஹோய் ஹோய்…

பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : போலாம் ரைட்…

BGM

பெண் : காடு மனை வீடு தான…
சந்தோசம் எனக்கு…
நீ மூணு முழம் பூ குடுத்தா…
முந்தானை உனக்கு…

ஆண் : வாலு போச்சு கத்தி வந்தது…
பலம் கத இருக்கு…
அடி வசதி வந்தது வாழ்க்கை போனது…
நம்மோட கணக்கு…

பெண் : இருவருக்கும் ஒரு தலையணை…
உறக்கம் வாராதா…

ஆண் : இருக்கட்டும் இவனுக்கும் அந்த…
நெனப்பு வாராதா…

பெண் : உடல் மறந்து சுகம் மறந்து…
உறவாடும் நேரம் வராதா…

ஆண் : ரெக்க கட்டி பறக்குதடி…
அண்ணாமலை சைக்கிள்…

பெண் : ஆச பட்டு ஏறிக்கிட்டேன்…
அய்யாவோட பைக்கில்…

ஆண் : ஆன் தோள தட்டி பிடிக்கயிலே…
என்ன சுகம் கண்ணம்மா…

பெண் : இந்த சுகம் எதில் இருக்கு…
இன்னும் கொஞ்சம் போவோமா…

ஆண் : அட டா பழகி கெடந்த…
பழைய நெனைப்பில…

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா…
அண்ணாமலை சைக்கிள்…

ஆண் : ஆச பட்டு ஏறிகோடி…
அய்யாவோட பைக்கில்…


Notes : Rekai Katti Parakuthudi Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. ரெக்கே கட்டி பரக்குதடி பாடல் வரிகள்.


கொண்டையில் தாழம் பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாஅண்ணாமலை

Kondaiyil Thalampoo Song Lyrics in Tamil


BGM

குழு : பாபபப்ப பாபபப்ப பப்பபா…
பாபபப்ப பாபபப்ப பப்பபா…
பபப பப்பா பபப பப்பபா…
பபப பப்பா பபப பப்பபா…

ஆண் : கொண்டையில்…
குழு : தாழம்பூ…
ஆண் : நெஞ்சிலே…
குழு : வாழைப்பூ…
ஆண் : கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ… ஆ…

ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…

ஆண் : உன்னாட்டம் பொம்பள யாரடி…
இந்த ஊரெல்லாம் உன்பேச்சுதானடி…
அல்லி ராணி என் அருகில் வா நீ…
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா…

பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…

பெண் : உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே…
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே…
மின்னல் போல நீ வந்து நின்றால்…
கூட்டம் கை தட்டுமே…
கோடி பூக்கள் கொட்டுமே…

ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…

குழு : பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…
பபபபபா பபபபபா…

BGM

ஆண் : பஞ்சுமெத்த கால் முளைச்சி…
நடந்து வந்தத போல…
நீ சுத்தி வந்து இழுக்குறியே…
சும்மா கெடந்த ஆள… ஆ ஆஹா… ஹே ஹே ஆஹா…

பெண் : கன்று கண்டா கயிர் அறுக்கும்…
காரான் பசுவ போல…
நீ எதுக்க வந்தா வழுக்குதய்யா…
இழுத்து கட்டிய சேல…

ஆண் : கண்டாங்கி சேலையாக மாறவா…
உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா…

பெண் : கல்யாண தாலி கட்டிபுட்டு…
கட்டில் மேலாடு ஜல்லிகட்டு…

ஆண் : ஆனி வந்தா தாலி வந்து…
கட்டுவேன் சத்தியம்…
இன்னும் என்ன பத்தியம்…

பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…

BGM

பெண் : மின்னல் போல நீ நடக்கும்…
சுறுசுறுப்ப பாத்து…
ஜன்னல் திறந்து கொண்டதய்யா…
சனிக்கிழமை நேத்து… ஆ ஆ ஆன் ஆ…

ஆண் : தாஜ்மஹால் நடந்து வந்து…
தழுவிக்கொண்டத பாத்து…
அடி தண்ணியாக வேர்த்து போச்சு…
சட்டையெல்லாம் நேத்து…

பெண் : உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது…
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது…

ஆண் : கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்…
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்…

பெண் : அந்த யோகம் வந்து சேர்ந்தா…
கண்களும் தூங்குமா…
கட்டில் என்ன தாங்குமா…

ஆண் : குஷ்பூ… குஷ்பூ… குஷ்பூ…

ஆண் : கொண்டையில் தாழம்பூ…
நெஞ்சிலே வாழைப்பூ…
கூடையில் என்ன பூ…
குஷ்பூ… என் குஷ்பூ…

ஆண் : உன்னாட்டம் பொம்பள யாரடி…
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி…
அல்லி ராணி என் அருகில் வா நீ…
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா…

பெண் : வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…


Notes : Kondaiyil Thalampoo Song Lyrics in Tamil. This Song from Annaamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. கொண்டையில் தாழம் பூ பாடல் வரிகள்.


வந்தேன்டா பால்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅண்ணாமலை

Vanthenda Paalkaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…
உன்னால முடியாது தம்பி…
அட பாதி புள்ள பொறக்குதப்பா…
பசும்பால தாய் பாலா நம்பி…

ஆண் : ஹோய்… வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி…
பாலாக பிரிப்பது…
பசுவோட வேலையப்பா…

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு…
தண்ணீரைக் கலப்பது…
மனிதனின் மூளையப்பா…

ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி…
பாலாக பிரிப்பது…
பசுவோட வேலையப்பா…

ஆண் : அது பிரித்தாலும் பாலோடு…
தண்ணீரைக் கலப்பது…
மனிதனின் மூளையப்பா…

ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு…
எருவை எரிச்சா திருநீறு…
உனக்கு என்ன வரலாறு…
உண்மை சொன்னா தகராறு…

ஆண் : நீ மாடு போல உழைக்கலியே…
நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM

குழு : தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தானனா தன தந்தானனா…
தன தந்தனா தந்தனா தந்தனா னா…
தந்தனா தந்தனா தந்தனா…

ஆண் : அட மீன் செத்தா கருவாடு…
நீ செத்தா வெறும்கூடு…
கண்ணதாசன் சொன்னதுங்க…

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்…
செத்தாலும் தோலாகும்…
நான் கண்டு சொன்னதுங்க…

ஆண் : அட மீன் செத்தா கருவாடு…
நீ செத்தா வெறும்கூடு…
கண்ணதாசன் சொன்னதுங்க…

ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்…
செத்தாலும் தோலாகும்…
நான் கண்டு சொன்னதுங்க…

ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்…
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க…
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்…
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க…

ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு…
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…
உன்னால முடியாது தம்பி… ஹா…
அட பாதி புள்ள பொறக்குதப்பா…
பசும்பால தாய் பாலா நம்பி…

ஆண் : வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…

BGM


Notes : Vanthenda Paalkaran Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. வந்தேன்டா பால்காரன் பாடல் வரிகள்.