பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் | தேவா | அண்ணாமலை |
Oru Pen Pura Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…
ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…
—BGM—
ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்…
தூக்கம் கண்ண சொக்குமே…
அது அந்த காலமே…
ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்…
கண்ணில் தூக்கம் இல்லையே…
அது இந்த காலமே…
ஆண் : என் தேவனே… ஓ… தூக்கம் கொடு…
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு…
பாலைவனம் கடந்து வந்தேன்…
பாதங்களை ஆறவிடு…
ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…
ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…
—BGM—
ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா…
அன்று பாடம் படித்தேன்…
அது பழைய பழமொழி…
ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே…
இதை நெஞ்சில் நிறுத்து…
இது புதிய பழமொழி…
ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை…
பெண் பிள்ளையோ போகும் வரை…
விழி இரண்டும் காயும் வரை…
அழுதுவிட்டேன் ஆனவரை…
ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…
ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…
Notes : Oru Pen Pura Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பெண் புறா பாடல் வரிகள்.