Category Archives: புது மனிதன்

புது மனிதன் – Pudhu Manithan (1991)

அங்கம் உனதங்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாபுது மனிதன்

Angam Unadhu Angam Song Lyrics in Tamil


பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

BGM

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி…
பூவில் விழுந்துவிட்டேன்…

பெண் : தூக்கி நிறுத்த வந்தேன்…
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல்விட்டேன்…
பெண்ணுக்குள்ளே பட்டம்விட்டேன்…

பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி…
என் பேரினை நான் மறந்தேன்…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

BGM

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : காதல் பிறந்துவிட்டால்…
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை…

பெண் : பூக்கள் திறந்துகொண்டால்…
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை…

ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை…
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை…

பெண் : நான் கண்ணால் சொன்னால்…
பாவம் தன்னால் ஏன் புரியவில்லை…

ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…

பெண் : பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…

ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே…
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே…

பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்…
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…


Notes : Angam Unadhu Angam Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. அங்கம் உனதங்கம் பாடல் வரிகள்.


நிலவுக்கு தாலாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகிதேவாபுது மனிதன்

Nilavukku Thaalaattu Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை…
இசையே பாடாதா பாடாதா…

பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…

BGM

பெண் : பூமெத்தை மேலே முள் வைத்து போனால்…
பிள்ளை உறங்காது…
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்…
கண்ணீர் சுமந்தாளே…

பெண் : பூமெத்தை மேலே முள் வைத்து போனால்…
பிள்ளை உறங்காது…
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்…
கண்ணீர் சுமந்தாளே…

பெண் : இசை மழை தேடும்… நதியென பாடி…
இசை மழை தேடும் நதியென பாடி…
நலந்திட வந்தாளே…
வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே… ஹோய்…

பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…

பெண் : காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
கண்ணே கலங்காதே…
மழை வரும் நேரம் மேகங்கள் கூடும்
மலரே நீ பாடு…

BGM

பெண் : மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்…
மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய்…
தடைகளை வெல்வாயே…
தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை… ஹோய்…

பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா…

பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…


Notes : Nilavukku Thaalaattu Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Na. Kamarasan. நிலவுக்கு தாலாட்டு பாடல் வரிகள்.


ஏலேலேங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. எஸ். சித்ராதேவாபுது மனிதன்

Yelelankuyilae Song Lyrics in Tamil


பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…

BGM

பெண் : சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…
சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…

பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல…
தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல…
நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…

BGM

பெண் : ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…
ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…

பெண் : தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான்…
சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான்…
சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…


Notes : Yelelankuyilae Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. ஏலேலேங்குயிலே பாடல் வரிகள்.