ஏலேலேங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. எஸ். சித்ராதேவாபுது மனிதன்

Yelelankuyilae Song Lyrics in Tamil


பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…

BGM

பெண் : சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…
சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும்…
சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்…

பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல…
தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல…
நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…

BGM

பெண் : ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…
ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்…

பெண் : தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான்…
சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான்…
சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே…
நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்…

பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே…
மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்…


Notes : Yelelankuyilae Song Lyrics in Tamil. This Song from Pudhu Manithan (1991). Song Lyrics penned by Vairamuthu. ஏலேலேங்குயிலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top