பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | எங்கிட்ட மோதாதே |
Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
—BGM—
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
—BGM—
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…
மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…
—BGM—
ஆண் : பாய் போடத்தானே தாய் மாமன் நானே…
பூவைக்குப் பூவை வைக்க வந்தேனே…
பெண் : நீ வைத்த பூவும் நான் வைத்த பொட்டும்…
நீங்காத சொந்தம் என்று கண்டேனே…
ஆண் : நீயின்றி எனக்கு யார்தான் பொருத்தம்…
பெண் : ஆனாலும் சில பேர் மனதில் வருத்தம்…
ஆண் : கண்ணே நீ என்றும் பாடு காதலின் விருத்தம்…
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
—BGM—
பெண் : பூ மாலை சூட…
பொன்னூஞ்சல் ஆட…
கல்யாண மேளச் சத்தம் கேட்காதோ…
ஆண் : கட்டில்கள் போட கச்சேரி பாட…
பூந்தென்றல் எட்டி எட்டி பார்க்காதோ…
பெண் : நீ என்னை தாங்கு மார்பில் நிறுத்தி…
ஆண் : நீயின்றி ஏது வாழ்வில் ஒருத்தி…
பெண் : நான் தானே வாடை பட்டு வெடிக்கின்ற பருத்தி…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…
பெண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆண் : ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
Notes : Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Vaali. சரியோ சரியோ பாடல் வரிகள்.