Category Archives: புதிய பறவை

Aaha Mella Nada Song Lyrics in Tamil

ஆஹா மெல்ல நட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Aaha Mella Nada Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

BGM

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

BGM

ஆண் : படுக்கையை இறைவன் விரித்தான்…
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்…
படுக்கையை இறைவன் விரித்தான்…
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்…

ஆண் : பருவத்தில் ஆசையை கொடுத்தான்…
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்…
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

BGM

ஆண் : அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு…
அதில் அழகிய மேனியின் நடிப்பு…
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு…
அதில் அழகிய மேனியின் நடிப்பு…

ஆண் : பட படவென வரும் துடிப்பு…
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு…
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

BGM

ஆண் : திருமணம் என்றதும் அடக்கம்…
கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்…
வருவதை நினைத்தால் நடுக்கம்…
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்…
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்…

ஆண் : ஹையோ… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

BGM


Notes : Aaha Mella Nada Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. ஆஹா மெல்ல நட பாடல் வரிகள்.


பார்த்த ஞாபகம் இல்லையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்புதிய பறவை

Partha Nyabagam Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM

பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…

BGM

பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…

BGM

பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM

பெண் : அன்று சென்றதும் மறந்தாய் உறவை…
இன்று வந்ததே புதிய பறவை…
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை…
நாம் சந்திப்போம் இந்த நிலவை…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM


Notes : Partha Nyabagam Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் வரிகள்.


உன்னை ஒன்று கேட்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்புதிய பறவை

Unnai Ondru Song Lyrics in Tamil


பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
தாலாட்டு பாட தாயாகவில்லை…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : நிலவில்லா வானம்…
நீரில்லா மேகம்…
பேசாத பெண்மை…
பாடாது உண்மை…

பெண் : கண்ணை மெல்ல மூடும்…
தன்னை எண்ணி வாடும்…
பெண்ணை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : தனிமையில் கானம்…
சபையிலே மவுனம்…
உறவுதான் ராகம்…
உயிரெல்லாம் பாசம்…

பெண் : அன்பு கொண்ட நெஞ்சில்…
அனுபவம் இல்லை…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…


Notes : Unnai Ondru Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. உன்னை ஒன்று கேட்பேன் பாடல் வரிகள்.


எங்கே நிம்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Engey Nimmathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

BGM

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

BGM

ஆண் : எங்கே மனிதன் யாரும் இல்லையோ…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

BGM

ஆண் : எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது…
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது…

ஆண் : என்ன நினைத்து என்னைப் படைத்தான்…
இறைவன் என்பவனே…
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த…
இறைவன் கொடியவனே… ஓஓ…
இறைவன் கொடியவனே…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…

BGM

ஆண் : பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே…
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே…

ஆண் : என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்…
வணங்குவேன் தாயே…
இன்று மட்டும் அமைதி தந்தால்…
உறங்குவேன் தாயே… ஓ…
உறங்குவேன் தாயே…

ஆண் : எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…


Notes : Engey Nimmathi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. எங்கே நிம்மதி பாடல் வரிகள்.


சிட்டு குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Chittu Kuruvi Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

பெண் : மொட்டு விரிந்த மலரினிலே…
வண்டு மூழ்கிட கண்டேனே…
மூங்கிலிலே காற்று வந்து…
மோதிட கண்டேனே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

BGM

பெண் : பறந்து செல்ல நினைத்துவிட்டேன்…
எனக்கும் சிறகில்லையே…
பழக வந்தேன் தழுவ வந்தேன்…
பறவை துணையில்லையே…

பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும்…
வார்த்தை வரவில்லையே…
என்னென்னவோ நினைவிருந்தும்…
நாணம் விடவில்லையே… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM

பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா…
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா…
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா…
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா… ஹோய்…

பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…

BGM


Notes : Chittu Kuruvi Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. சிட்டு குருவி பாடல் வரிகள்.