Category Archives: கிருஷ்ணன் பாடல்கள்

Krishna Devotional Song Lyrics in Tamil

குருவாயூருக்கு வாருங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Guruvayurukku Varungal Song Lyrics in Tamil


பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

BGM

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

BGM

பெண் : கண்ணனின் மேனி கடல் நீலம்…
அவன் கண்களிரண்டும் வான் நீலம்…
கண்ணனின் மேனி கடல் நீலம்…
அவன் கண்களிரண்டும் வான் நீலம்…
கடலும் வானும் அவனே என்பதை…
காட்டும் குருவாயூர்க் கோலம்…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

BGM

பெண் : சந்தியா காலத்தில் நீராடி அவன்…
சந்நிதி வருவார் ஒரு கோடி…

பெண் : நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

பெண் : சந்தியா காலத்தில் நீராடி அவன்…
சந்நிதி வருவார் ஒரு கோடி…
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு…
மாலைகள் இடுவார் குறை ஓடி…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

BGM

பெண் : உச்சிக்காலத்தில் சிருங்காரம்…
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்…
உச்சிக்காலத்தில் சிருங்காரம்…
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்…
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே…
பாவையர் தாய்மை ரீங்காரம்…

பெண் : நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

BGM

பெண் : மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி…
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி…
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி…
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி…
நெய் விளக்கேற்றி பொய் இருள் அகற்று…
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி…

பெண் : நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

பெண் : சாத்திரம் தந்த கண்ணனுக்கு…
ராத்திரி பூஜை ஜகஜோதி…
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்…
பக்தியில் பிறந்த உயர் நீதி…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…

பெண் : குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…

பெண் : நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

பெண் : நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…


Notes : Guruvayurukku Varungal Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. குருவாயூருக்கு வாருங்கள் பாடல் வரிகள்.


குறை ஒன்றும் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎம்.எஸ்.சுப்புலட்சுமிராஜாஜிகிருஷ்ணன் பாடல்கள்

Kurai Ondrum Illai Song Lyrics in Tamil


BGM

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…

பெண் : கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா…
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு…
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

பெண் : வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க…
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

BGM

பெண் : திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்…

பெண் : திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்…
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…

பெண் : குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

BGM

பெண் : கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி…
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா…
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி…
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
யாதும் மறுக்காத மலையப்பா…
யாதும் மறுக்காத மலையப்பா…
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்…
கருணைக் கடல் அன்னை…
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு…
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு…
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா…
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா…


Notes : Kurai Ondrum Illai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்.


கோகுலத்து பசுக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Gokulathu Pasukkalellam Song Lyrics in Tamil


BGM

பெண் : கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…

BGM

பெண் : கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…

பெண் : அந்த மோகனின் பேரைச் சொல்லி…
மூடி வைத்த பாத்திரத்தில்…
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி…

பெண் : அந்த மோகனின் பேரைச் சொல்லி…
மூடி வைத்த பாத்திரத்தில்…
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி…

பெண் : இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…

BGM

பெண் : கண்ணன் அவன் நடனமிட்டு…
காளிந்தியில் வென்ற பின்னால்…
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி…

பெண் : கண்ணன் அவன் நடனமிட்டு…
காளிந்தியில் வென்ற பின்னால்…
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி…

பெண் : அவன் கனிஇதழில் பால் குடித்து…
பூதகியைக் கொன்ற பின்தான்…

BGM

பெண் : அவன் கனிஇதழில் பால் குடித்து…
பூதகியைக் கொன்ற பின்தான்…
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி…

பெண் : இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…

பெண் : கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…

BGM

பெண் : குளத்தில் முங்கிக் குளிக்கையிலே…
கோவிந்தன் பெயரைச் சொன்னால்…
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி…

பெண் : குளத்தில் முங்கிக் குளிக்கையிலே…
கோவிந்தன் பெயரைச் சொன்னால்…
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி…

பெண் : சேலை திருத்தும் போது அவன் பெயரை…
ஸ்ரீரங்கா என்று சொன்னால்…

BGM

பெண் : சேலை திருத்தும் போது அவன் பெயரை…
ஸ்ரீரங்கா என்று சொன்னால்…
அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி…

பெண் : இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
இராமாரி ஹரே கிருஷ்ணாரி…

BGM

பெண் : படிப்படியாய் மலையில் ஏறி…
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்…
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி…

பெண் : படிப்படியாய் மலையில் ஏறி…
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்…
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி…

பெண் : அடி படிப்பில்லாத ஆட்கள் கூட…
பாதத்திலே போய் விழுந்தால்…

BGM

பெண் : அடி படிப்பில்லாத ஆட்கள் கூட…
பாதத்திலே போய் விழுந்தால்…
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி…
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி…

பெண் : கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…

பெண் : அந்த மோகனின் பேரைச் சொல்லி…
மூடி வைத்த பாத்திரத்தில்…
மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி…

பெண் : இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…

BGM


Notes : Gokulathu Pasukkalellam Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. கோகுலத்து பசுக்கள் பாடல் வரிகள்.


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Pullanguzhal Kodutha Moongigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

ஆண் : பன்னீர் மலர் சொரியும் மேகங்களே…
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்…

ஆண் : பன்னீர் மலர் சொரியும் மேகங்களே…
எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்…
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

ஆண் : குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்…
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்…

ஆண் : குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்…
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்…
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM

ஆண் : பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்…
அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்…
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்…
அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்…

ஆண் : பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

ஆண் : புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

BGM


Notes : Pullanguzhal Kodutha Moongigale Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்.


கோபியரே கோபியரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்கிருஷ்ணன் பாடல்கள்

Gopiyare Gopiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

குழு : ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : வேங்கடத்து மலைதனிலே வெண்முகிலாய் மாறுங்களே…
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

குழு : பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…

பெண் : நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே…
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே…
சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

குழு : மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்…
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

குழு : தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : ஆழிமழைக் கண்ணன் அவன்…
அழகுநகை மன்னன் அவன்…
தாழை இலை பயிரினைப் போல்…
தானுறையும் வண்ணன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

குழு : நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : நாடிவரும் அன்னையர்க்கு…
நவநீத கிருஷ்ணன் அவன்…
நந்தகுல யாதவர்க்கு…
ராகவ பாலன் அவன்…

பெண் : கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

குழு : கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…

BGM


Notes : Gopiyare Gopiyare Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kannadasan. கோபியரே கோபியரே பாடல் வரிகள்.


ஆயர்பாடி மாளிகையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ். பி. பாலசுப்ரமணியம்Unknownகிருஷ்ணன் பாடல்கள்

Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…

ஆண் : அந்த மந்திரத்தில் அவன் உறங்க…
மயக்கத்திலே இவன் உறங்க…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…

ஆண் : அவன் மோகநிலை கூட…
ஒரு யோகநிலை போலிருக்கும்…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…

ஆண் : அவன் பொன்னழகை காண்பதர்க்கும்…
போதை முத்தம் பெறுவதற்கும்…
கன்னியரே கோபியரே வாரீரோ…
கன்னியரே கோபியரே வாரீரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…


Notes : Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்.