ஆயர்பாடி மாளிகையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ். பி. பாலசுப்ரமணியம்Unknownகிருஷ்ணன் பாடல்கள்

Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…

ஆண் : அந்த மந்திரத்தில் அவன் உறங்க…
மயக்கத்திலே இவன் உறங்க…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…

ஆண் : அவன் மோகநிலை கூட…
ஒரு யோகநிலை போலிருக்கும்…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

BGM

ஆண் : கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…

ஆண் : அவன் பொன்னழகை காண்பதர்க்கும்…
போதை முத்தம் பெறுவதற்கும்…
கன்னியரே கோபியரே வாரீரோ…
கன்னியரே கோபியரே வாரீரோ…

ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…


Notes : Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top