aathangara-marame-song-lyrics

ஆத்தங்கரை மரமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & மனோஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Aathangara Marame Song Lyrics in Tamil


ஆண் : அத்தைக்கு பிறந்தவளே…
ஆளாகி நின்றவளே…
பருவம் சுமந்து வரும்…
பாவாடை தாமரையே…

ஆண் : தட்டாம்பூச்சி பிடித்தவள்…
தாவணிக்கு வந்ததெப்போ…
மூன்றாம் பிறையே…
நீ முழு நிலவா ஆனதெப்போ…
மெளனத்தில் நீ இருந்தா…
யாரை தான் கேட்பதெப்போ… ஓ…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

ஆண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

பெண் : மாமனே உன்னை தாங்காம…
மத்தியில் சோறும் பொங்காம…
பாவி நான் பருத்தி மாரா போனேனே…

பெண் : காகம் தான் கத்தி போனாலும்…
கதவு தான் சத்தம் போட்டாலும்…
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே…

பெண் : ஒத்தையில் ஓடைக்கரையோரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
அந்த இரயில் தூரம் போனதும்…
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே…

பெண் : முத்து மாமா என்னை விட்டு போகாதே…
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா…
தங்கமே தளும்பும் சுகந்தானா…
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா…

ஆண் : தொட்ட பூ எல்லாம் சுகந்தானா…
தொடாத பூவும் சுகந்தானா…
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா…

ஆண் : அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அன்னமே உன்னையும் என்னையும்…
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…

ஆண் : மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு…
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…


Notes : Aathangara Marame Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தங்கரை மரமே பாடல் வரிகள்.