ஆசையில் ஒர் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்தேவாஆசையில் ஒர் கடிதம்

Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன்…
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்…
குளக்கரையே ஒடைய கண்டேன்…
விதியே இது தகுமா…

ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்…
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்…
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ…
சரியோ இது சரியோ…

ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே…
தாலியின் மஞ்சள் கருகுவதோ…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு…
விதி வலையில் வலி தெரிவதில்லை…
தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை…
இனிமேல் என்ன கதையோ…

ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ…
பல்லியென்று அதை வெறுப்பதென்ன…
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன…
பிழையோ என்ன பிழையோ…
கண்ணீர் என்னை தண்டிக்குமா…
காலங்கள் நாளை மன்னிக்குமா…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

BGM


Notes : Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. ஆசையில் ஒர் கடிதம் பாடல் வரிகள்.