பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் | தேவா | ஆசையில் ஒர் கடிதம் |
Nee Irunthal Naan Song Lyrics in Tamil
—BGM—
{ பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்… } * (3)
ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
—BGM—
ஆண் : ஹேஹே… நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
—BGM—
ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…
—BGM—
ஆண் : நீ நடக்கும் புல்வெளியில்…
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்…
நீ பேசும் தாய்மொழியில்…
வல்லினங்கள் களைந்து வைப்பேன்…
ஆண் : நீ கடந்த தெருவில்…
உந்தன் வாசம் தேடுவேன்…
நீ குளித்த நதியில் மூழ்கி…
மோட்சம் காணுவேன்…
ஆண் : உன் ஜன்னல் ஓரம்…
நான் காற்றாக வருவேன்…
நாள் ஒன்று வீதம்…
நான் பூக்கொண்டு தருவேன்…
ஆண் : கண்கள் தீண்டும் கனவைப் போலே…
நீ அறியாமல் நான் தொடுவேன்…
நீ என் காதலியானால்…
பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்…
—BGM—
ஆண் : வெள்ளை நிலா ஒளி திரட்டி…
உள்ளங்கையில் ஊற்றி வைப்பேன்…
காற்றலையில் இசை பிரித்து…
காதுகளில் தவழ வைப்பேன்…
ஆண் : கோபுரங்கள் ஏறி உந்தன்…
பேரை கூவுவேன்…
தாஜ்மஹாலின் மேலே உந்தன்…
பேரை எழுதுவேன்…
ஆண் : உன் கூந்தல் முடியில்…
நான் என் ஜீவன் முடிவேன்…
நீ ஊடல் கொண்டால்…
நான் உன் காலில் விழுவேன்…
ஆண் : ஒற்றை முத்தம் சிந்துவதென்றால்…
உன் மடியில் உயிர் விடுவேன்…
நீ என் காதலியானால்…
ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
—BGM—
ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…
—BGM—
ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…
ஆண் : நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…
—BGM—
Notes : Nee Irunthal Naan Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. நீ இருந்தால் பாடல் வரிகள்.