vilambara-idaiveli-song-lyrics

விளம்பர இடைவெளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துகிறிஸ்டோபர் ஸ்டான்லி, சுதர்ஷன் அசோக், ஹிப் ஹாப் தமிழா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Vilambara Idaiveli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒளி இல்லா உன் மொழிகள்…
விடை தேடும் என் விழிகள்…
இமைக்காத நம் நொடிகள்…
கடிகார தேன் துளிகள்…

ஆண் : அடி வாயார உன் காதல் நீ சொல்லடி…
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி…
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி…
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
அடி என்ன நிலை உந்தன் மனதில்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

BGM

பெண் : காதல் பூவை நான் ஏற்று கொண்டால்…
உன் காத்திருப்பு நிறைவாகுமே…
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்…
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே…

பெண் : இவளின் கனவோ உள்ளே ஒளியும்…
இரவும் பகலும் இதயம் வழியும்…
வழியும் கனவு இதழை அடையும்…
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்…

ஆண் : விளம்பர இடைவெளி மாலையில்…
மாலையில்…

ஆண் : உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்…
வேளையில்…

ஆண் : என் நிறமற்ற இதயத்தில் வானவில்…
வானவில்…

ஆண் : அடி என்ன நிலை உந்தன் மனதில்…
உந்தன் மனதில்…

BGM

பெண் : நிலமெல்லாம் உன் தடமே…
நிலவெல்லாம் உன் படமே…
நிஜமெல்லாம் உன் நிறமே…
நினைவெல்லாம் உன் நியாமே… ஹே…

பெண் : மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ…
மதமே இல்லா இறைவன் நீயோ…
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ…
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ…

குழு (ஆண்கள்) : நான் உனதே அடி நீ எனதா…

ஆண் : தெரியாமல் நானும் தேய்கிறேன்…

குழு (ஆண்கள்) : இல்லை என்றே சொன்னால் இன்றே…

ஆண் : என் மோக பார்வை மூடுவேன்…

ஆண் : நான் உனதே அடி நீ எனதா…
தெரியாமல் நானும் தேய்கிறேன்…
இல்லை என்றே சொன்னால் இன்றே…
என் மோக பார்வை மூடுவேன்…

BGM


Notes : Vilambara Idaiveli Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Kabilan Vairamuthu. விளம்பர இடைவெளி பாடல் வரிகள்.