Tag Archives: Female Love Failure Song Lyrics

Female Love Failure Song Lyrics

Inneram Indha Neram Song Lyrics in Tamil

இந்நேரம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் மணிஆதித்யா ஆர் கேவிஜய் புல்கானின்சோனி மியூசிக் சௌத்

Inneram Indha Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : அறியாத பூகம்பமாக…
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே…
தெரியாத ஒரு காதல் கூடு…
அதில் இதயங்கள் மூன்றோடுதே…

ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே…
கண் இமை போல சேர்வாயோ பிரிவே…

—BGM—

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

BGM

ஆண் : ஏன் இந்த கனவு…
வெட்ட வெளியில் கொட்டி செல்லுதே…
கொட்டி செல்லுதே…
யார் இட்ட விறகில் நெஞ்சம் நெருப்பாய்…
பற்றி கொள்ளுதே…

ஆண் : போ இன்னும் தொலைவாய்…
இந்த நெருக்கம் என்னை தள்ளுதே…
என்னை தள்ளுதே…
நீ தந்த நினைவு என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே…

ஆண் : ஒன்று சேர்ந்தாலும் விட்டுச் சென்றாலும்…
இந்த காதல்தான் மாறாது…
சொல்லி கொண்டாலும் உள்ளே கொன்றாலும்…
இந்த காதல்தான் தீராதே…

ஆண் : உன்னை காணதான் இங்கே வந்தேனே…
என்னை காணாமல் நானும் நின்றேனே…
வெளி காட்டாமல் வேஷம் கொண்டேனே…
எந்தன் ஆசைகள் அதை கொன்றேனே…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

ஆண் : இந்நேரம் இந்த நேரம் பின்னே நகர கூடாதா…
உன் மீது வந்த காதல் உள்ளே புதையாதா…
என் காயம் ஆயுள் காலம் தீரும் போதும் ஆறாதா…
முன் பாதை ஞாபகங்கள் நெஞ்சில் அணையாதா…

ஆண் : அறியாத பூகம்பமாக…
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே…
தெரியாத ஒரு காதல் கூடு…
அதில் இதயங்கள் மூன்றோடுதே…

ஆண் : எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே…
கண் இமை போல சேர்வாயோ பிரிவே…

ஆண் : கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ…
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ…
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ…
அதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ…

BGM


Notes : Inneram Indha Neram Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2022). Song Lyrics penned by Tamil Mani. இந்நேரம் இந்த நேரம் பாடல் வரிகள்.


நினைக்க தெரிந்த மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆனந்த ஜோதி

Ninaikka Therindha Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

பெண் : மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா…
மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா…
அன்பே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா…
இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா…
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா…
படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா…
பனியே மறைய தெரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…

BGM

பெண் : கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா…
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா…
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா…
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…
தலைவா என்னை புரியாதா…

பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…


Notes : Ninaikka Therindha Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. நினைக்க தெரிந்த மனமே பாடல் வரிகள்.


மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Marudaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…

BGM

பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…

பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…

BGM

பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

BGM

பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…

BGM

பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…


Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.


என் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

En Nenjil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

பெண் : என் பெயரில் ஒரு போ் சோ்ந்தது…
அந்த போ் என்னவென கேட்டேன்…
என் தீவில் ஒரு கால் வந்தது…
அந்த ஆள் எங்கு என கேட்டேன்…

பெண் : கண்டுபிடி உள்ளம் சொன்னது…
உன்னிடத்தில் உருகி நின்றது…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : சில நேரத்தில் நம் பார்வைகள்…
தவறாகவே எடை போடுமே…
மழை நேரத்தில் விழி ஓரத்தில்…
இருளாகவே ஒளி தோன்றுமே…

பெண் : இதயம் எடை போடவே…
இதயம் தடையாய் இல்லை…
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்…
என்னை நீ மாற்றினாய்…
எங்கும் நிறம் பூட்டினாய்…
என் மனம் இல்லையே என்னிடம்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

BGM

பெண் : உன்னை பார்த்ததும் அந்நாளிலே…
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே…
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…

பெண் : இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…

பெண் : என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…

பெண் : என்ன அது இமைகள் கேட்டது…
என்ன அது இதயம் கேட்டது…
காதல் என உயிரும் சொன்னதன்பே…
காதல் என உயிரும் சொன்னதன்பே…

BGM

பெண் : காதல் இது உயிரும் சொன்னதன்பே…
காதல் இது உயிரும் சொன்னதன்பே…


Notes : En Nenjil Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. என் நெஞ்சில் பாடல் வரிகள்.


நண்பனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜா & மதுஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Nanbane Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…

பெண் : நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ…
கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே…
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று…
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM

பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன்…
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்…
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்…

பெண் : எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல்…
முழுவதும் பிழை…
விழிகளின் வழி விழுந்தது மழை…
எல்லாம் உன்னால்தான்…

பெண் : இதுவா உந்தன் நியாயங்கள்…
எனக்கேன் இந்த காயங்கள்…
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்… ஓஓ…

பெண் : முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ…
என் நண்பனே என்னை எய்த்தாய்…

ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா…
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே…
காதல் ஓவியம் கிழிந்துபோனதா…
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்…

BGM

பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்…
அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்…

பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு…
உனக்கென தெரியும்…
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி…
இள மனம் எங்கும் இருந்தது வலி…
எம்மா எம்மா…

பெண் : உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை… ஓஓ…

பெண் : எதுவும் அங்கு மாயம்தான்…
எல்லாம் வர்ணஜாலம்தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM


Notes : Nanbane Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. நண்பனே பாடல் வரிகள்.