Tag Archives: ராஜேஷ் கிருஷ்ணன்

ரா ரா ரா ராஜகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ra Ra Rajakumara Song Lyrics in Tamil


குழு : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
பெண் : ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ஆண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஓடோடி வாராய் பேதை மீரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

BGM

பெண் : பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்…
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா…
குழு : ஓயே ஓயே…

ஆண் : பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே…
மடியில் ஏந்திட மாட்டேனா…
குழு : ஓயே ஓயே…

பெண் : ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே…
என்னை குத்தும் குத்தும்…

ஆண் : கண்ணே நான் வைப்பேன்…
உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்…

பெண் : உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ராஜகுமாரா… ராஜகுமாரா…

BGM

பெண் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு…
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

ஆண் : ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து…
கனவு காண்பது என் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

பெண் : பொதுவாக ஒரு பெண்ணில்…
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு…

ஆண் : கண்ணே அதை கண்டு…
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு…

பெண் : உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
ஆண் : காமன் என்பது நீ கொண்ட பேரா…

பெண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஆண் : ஓடோடி வாராய் பேதை மீரா…

குழு : ரா ரா ரா ரா ராஜகுமாரா…
ரா ரா ராஜகுமாரா ரா ரா…


Notes : Ra Ra Rajakumara Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ரா ராஜகுமாரா பாடல் வரிகள்.


Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil

மேகமாய் வந்து போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

BGM

ஆண் : உறங்காமலே உளறல் வரும்…
இதுதானோ ஆரம்பம்…
அடடா மனம் பறிபோனதே…
அதில்தானோ இன்பம்…

ஆண் : காதல் அழகானதா இல்லை அறிவானதா…
காதல் சுகமானதா இல்லை சுமையானதா…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

BGM

ஆண் : நீ வந்ததும் மழை வந்தது…
நெஞ்செங்கும் ஆனந்தம்…
நீ பேசினால் என் சோலையில்…
எங்கெங்கும் பூவாசம்…

ஆண் : என் காதல் நிலா என்று வாசல் வரும்…
அந்த நாள் வந்துதான் என்னில் சுவாசம் வரும்…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…
என் அன்பே… என் அன்பே…


Notes : Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்.


நீ பார்க்கின்றாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்ராஜேஷ் கிருஷ்ணன் & எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Nee Paarkindraai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…

ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி…
அதில் கண்டேன் நான் தாயின் மடி…
காதல் என்று சொன்னாலே…
தியானம் அல்லவா…
உன்னை எண்ணி நானும்…
தியானம் செய்யவா…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…

BGM

ஆண் : நீயம் நடந்தால்…
என்னை கடந்தால்…
ஒரு பூங்காவே என் மேலே…
மோதும் சுகம்…

ஆண் : கண்ணை அசைத்தாய்…
என்னை இசைத்தாய்…
ஒரு பனி பாறை என்னுள்ளே…
தோன்றும் கனம்…

ஆண் : உன்னை சுற்றிடும்…
விண்கலம் ஆகின்றேன்…
உந்தன் பார்வையில்…
நான் வளமாகிறேன்…

ஆண் : நீ ஒற்றை ரோஜா தந்தால்…
அதில் உலக பூவின் வாசம்…
நீ ஓர கண்ணில் பார்த்தால்…
சில லட்சம் மின்னல் வீசும்…

ஆண் : அன்பே அன்பே…
நீ தரை வானவில்…
உன்னை பாடும்…
நான் தவ பூங்குயில்…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…

BGM

ஆண் : உந்தன் விழிக்குள்…
என்னை அடைத்தால்…
ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா…

ஆண் : உன்னை பிரிந்தால்…
எந்தன் விழிக்குள்…
ஒரு முன்னூறு முள் வந்து நடமாடுதே…

ஆண் : கொன்று விட்டதே…
என் ஒரு பார்வையே…
அன்பு செய்திடு என் அதிகாரியே…

ஆண் : நீ பூமி பந்தில் வந்து…
நடமாடும் குட்டி சொர்க்கம்…
நீ கல்லில் அல்ல பெண்ணே…
கனியாலே செய்த சிற்பம்…

ஆண் : உந்தன் கண்கள்…
அது ஒரு அங்குலம்…
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்…

ஆண் : நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…

ஆண் : ஒரே முறை நீ கண் பாரடி…
அதில் கண்டேன் நான் தாயின் மடி…
காதல் என்று சொன்னாலே…
தியானம் அல்லவா…
உன்னை எண்ணி நானும்…
தியானம் செய்யவா…

BGM


Notes : Nee Paarkindraai Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Muthu Vijayan. நீ பார்க்கின்றாய் பாடல் வரிகள்.


சொல்லு தலைவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Sollu Thalaivaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹா… சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…

BGM

ஆண் : ஹே…சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
சொல்லு தலைவா நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா… ஹா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

BGM
குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

BGM

ஆண் : உச்சி மலை ஏறு…
நம் ஊர கொஞ்சம் பாரு…
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா…

குழு : நம்ம நம்பி தூங்குதிந்த…
நாடு தலைவா…

ஆண் : உத்தரவு போடு…
நீ ஓரம் நின்னு பாரு…
அப்பளத்தை நொறுக்குற…
நேரம் தலைவா…

குழு : அதுக்குள்ள வெற்றி வந்து…
சேரும் தலைவா…

ஆண் : குடு குடு வயசுல இறந்தா…
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்…
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா…
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்…

ஆண் : உயிர் மூச்சு இந்த நாடு…
இதை நாம் மறந்தால் பிழைப்போமா…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் உலகத்தை வென்று வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா… ஹே ஹே…

குழு : சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…
தலைவா தலைவா…

BGM

ஆண் : வாழ்க வாழ்க இந்துஸ்தானம்…
வாழ்க பல்லாண்டு…
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்…
சேர்ந்த பொன் நாடு…
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை…
எங்க தாய் பாலு ஆஹா….

BGM

ஆண் : வேட்டை எங்க சொல்லு…
பகை கோட்டை எங்க சொல்லு…
கோட்டை எல்லாம் இடிச்சு…
பல் விளக்கலாம்…

குழு : கோட்டை நின்ன இடத்துல…
எள்ள விதைக்கலாம்…

ஆண் : ஹே பாடு சிந்து பாடு…
நீ பாரதத்தைப் பாடு…
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்…
கண்ணனாகி வா…

குழு : ஆண்மை கொண்ட ராஜ ராஜ…
மன்னனாகி வா…

ஆண் : தேசிய கொடிக்கொரு கயிறாய்…
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்…
எரியிற தீயில தலைவா…
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்…

ஆண் : மண் மானம் தன் மானம்…
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் வெற்றிக் கொடி…
நட்டு வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
அட சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்…

குழு : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
தலைவா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…


Notes : Sollu Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Nandalala. சொல்லு தலைவா பாடல் வரிகள்.