பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பார்வதி | ஹரிசரண் & பத்மலதா | ஜிப்ரான் | அமர காவியம் |
Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
—BGM—
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…
ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… ஆஅஹா…
என் நெஞ்சை தைத்து போக…
—BGM—
ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்…
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்…
பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு…
தென்றல் வந்தே நிற்க கண்டேன்…
பெண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்…
இருந்தும் தூரங்கள் செல்வோம்…
ஆண் : பயணம் எங்கே முடிந்தால் என்ன…
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை…
ஆண் & பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
—BGM—
ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி…
பூக்கும் புது தொப்புள் கொடி…
பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்…
தீர்வை தரும் உந்தன் மடி…
ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம்…
எல்லாமே ஆனாயே நீயே…
உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட…
நான் வேண்டியே நிற்ப்பேன்…
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…
ஆண் : என் நெஞ்சை தைத்து போக…
பெண் : என் நெஞ்சை தைத்து போக…
ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…
பெண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…
ஆண் : தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…
ஆண் & பெண் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…
—BGM—
Notes : Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Parvathy. ஏதோதோ எண்ணம் வந்து பாடல் வரிகள்.