Tag Archives: எஸ். ஏ. ராஜ்குமார்

innisai-paadivarum-song-lyrics

இன்னிசை பாடிவரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Innisai Paadivarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…

ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…

ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…

ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…

ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM


Notes : Innisai Paadivarum Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்.


உன்னை கொடு என்னை தருவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி.உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Unnai Kodu Ennai Tharuven Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இதுதான் காதலடி…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
இதுவும் காதலடி…

ஆண் : தாலாட்டை கேட்காத…
ஒரு ஜீவன் நானம்மா…
தாயாகி நான் பாட…
சேயாகி கேளம்மா…
தாளம் பூவே…
என் தோள் சாயம்மா…

பெண் : என்னை தந்து…
உன்னை பெறுவேன்…
காதல் இதுதானே…
தன்னை தந்து…
கனவை பெறுவேன்…
காதல் இதுதானே…

BGM

ஆண் : உந்தன் பேரை…
எந்தன் பேனா எழுதும் போது…
வலிக்காமல் அன்பே நான் எழுதுவேன்…

பெண் : உயிரே உந்தன் கண்கள்…
காணும் கனவில் கூட…
நான் வந்து தாலாட்டு பாடுவேன்…
ஆண் : என் நிழலை யாரும்…
தான் மிதித்து போக விட மாட்டாய்…

பெண் : என்னை கிள்ள எனக்கேதான்…
சம்மதங்கள் தர மாட்டாய்…

ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி…
என் கண்மணி…
அந்த வலி கூட…
என்னை தாக்குமே…

பெண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
காதல் இது தானே…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
காதல் இதுதானே…

BGM

பெண் : வெயில் காலம் வந்தால்…
கண்ணின் இமைகள் ரெண்டை…
உனக்காக குடையாக மாற்றுவேன்…

ஆண் : காற்றில் தூசும் வந்து…
உந்தன் கண்ணில் பட்டால்…
பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்…

பெண் : எந்தன் வீட்டு தோட்டத்தில்…
நடந்து வந்த பூகம்பம்…

ஆண் : பூகம்பத்தின் பின்னாலும்…
பூமி மெல்ல பூ பூக்கும்…

பெண் : கரை ரெண்டுமே காணாத…
ஓர் நீரோடை நான்…

ஆண் : அணைக்கும் அணைக்கட்டு…
நான் ஆகிறேன்…

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இதுதான் காதலடி…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
இதுவும் காதலடி…

பெண் : ஆண் ஒருவன்…
தாயான அதிசயத்தை பார்த்தேனே…
காதலியை தாலாட்டும்…
காதலனை கண்டேனே…
எந்தன் ஆயுள் ரேகை…
உன் கையிலே…

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இது தான் காதலடி…

பெண் : என்னை தந்து…
உன்னை பெறுவேன்…
காதல் இது தானே…

BGM


Notes : Unnai Kodu Ennai Tharuven Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Pa Vijay. உன்னை கொடு என்னை தருவேன் பாடல் வரிகள்.

சொல்லு தலைவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நந்தலாலாராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Sollu Thalaivaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹா… சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…

BGM

ஆண் : ஹே…சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
சொல்லு தலைவா நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா… ஹா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

BGM
குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

BGM

ஆண் : உச்சி மலை ஏறு…
நம் ஊர கொஞ்சம் பாரு…
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா…

குழு : நம்ம நம்பி தூங்குதிந்த…
நாடு தலைவா…

ஆண் : உத்தரவு போடு…
நீ ஓரம் நின்னு பாரு…
அப்பளத்தை நொறுக்குற…
நேரம் தலைவா…

குழு : அதுக்குள்ள வெற்றி வந்து…
சேரும் தலைவா…

ஆண் : குடு குடு வயசுல இறந்தா…
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்…
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா…
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்…

ஆண் : உயிர் மூச்சு இந்த நாடு…
இதை நாம் மறந்தால் பிழைப்போமா…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் உலகத்தை வென்று வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா… ஹே ஹே…

குழு : சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…
தலைவா தலைவா…

BGM

ஆண் : வாழ்க வாழ்க இந்துஸ்தானம்…
வாழ்க பல்லாண்டு…
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்…
சேர்ந்த பொன் நாடு…
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை…
எங்க தாய் பாலு ஆஹா….

BGM

ஆண் : வேட்டை எங்க சொல்லு…
பகை கோட்டை எங்க சொல்லு…
கோட்டை எல்லாம் இடிச்சு…
பல் விளக்கலாம்…

குழு : கோட்டை நின்ன இடத்துல…
எள்ள விதைக்கலாம்…

ஆண் : ஹே பாடு சிந்து பாடு…
நீ பாரதத்தைப் பாடு…
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்…
கண்ணனாகி வா…

குழு : ஆண்மை கொண்ட ராஜ ராஜ…
மன்னனாகி வா…

ஆண் : தேசிய கொடிக்கொரு கயிறாய்…
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்…
எரியிற தீயில தலைவா…
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்…

ஆண் : மண் மானம் தன் மானம்…
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு…

குழு : ஜெய் ஹிந்துன்னு சொல்லு…
ஜெய் ஹிந்துன்னு சொல்லு…

ஆண் : நாம் வெற்றிக் கொடி…
நட்டு வரலாம்…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலை வா வா வா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
அட சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு தலைவா…

ஆண் : பத்து மாசம் வரை தானே…
தாய் மடியில சுமந்திருப்பா…
நித்தம் சுமக்குதிந்த நாடு…
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்…

குழு : சொல்லு தலைவா…
நீ சொல்லும் சொல்லில்…
இந்த படை வெல்லும் தலைவா…
தலைவா தலைவா…

ஆண் : ஹே சொல்லு தலைவா…
நம் மண்ணை விட…
சொந்தம் ஏது சொல்லு…
தலைவா… தலைவா…

குழு : தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…
தலைவா தலைவா தலைவா…


Notes : Sollu Thalaivaa Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Nandalala. சொல்லு தலைவா பாடல் வரிகள்.

பெத்தவ கண்ணீரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மயில்உன்னிமேனன்எஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Pethava Kanneeru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
குத்தந்தான் செஞ்சாலும்…
தவறேதும் இல்லையம்மா…

ஆண் : சிறக கொடுத்துவிட்டு…
சருகா கருகுதம்மா…
தாய் மண்ணை காக்கவிட்டு
தாய் உள்ளம் போகுதம்மா…

ஆண் : தொப்புள் கொடி அறுத்தவளே…
விட்டுச் செல்லும் நேரம் அம்மா…
தொட்டில் சுகம் காணாம…
பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா…

BGM

ஆண் : மூச்சோடு மூச்சு ஒன்னு…
முழுசா கலந்ததம்மா…
முன்னூறு யுகத்துக்கும்தான்…
வாழ்த்து கிடைக்கும் அம்மா…
மனசு கலங்காம…
மண்ணை வணங்குதம்மா…
காதல் சரித்திரத்த…
மாற்றி எழுதுதம்மா…

ஆண் : உயிரை கொடுத்தாக்கா…
மண்ணோடு புதஞ்சுடுன்னு…
தன்னையே கொடுக்குதம்மா…
நாட்டுக்காக கன்னிப் பொண்ணு…

BGM


Notes : Pethava Kanneeru Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Mayil. பெத்தவ கண்ணீரு பாடல் வரிகள்.