பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மயில் | உன்னிமேனன் | எஸ். ஏ. ராஜ்குமார் | உன்னை கொடு என்னை தருவேன் |
Pethava Kanneeru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
பெத்தவ கண்ணீரு…
ஆறாக ஓடுதம்மா…
குத்தந்தான் செஞ்சாலும்…
தவறேதும் இல்லையம்மா…
ஆண் : சிறக கொடுத்துவிட்டு…
சருகா கருகுதம்மா…
தாய் மண்ணை காக்கவிட்டு
தாய் உள்ளம் போகுதம்மா…
ஆண் : தொப்புள் கொடி அறுத்தவளே…
விட்டுச் செல்லும் நேரம் அம்மா…
தொட்டில் சுகம் காணாம…
பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா…
—BGM—
ஆண் : மூச்சோடு மூச்சு ஒன்னு…
முழுசா கலந்ததம்மா…
முன்னூறு யுகத்துக்கும்தான்…
வாழ்த்து கிடைக்கும் அம்மா…
மனசு கலங்காம…
மண்ணை வணங்குதம்மா…
காதல் சரித்திரத்த…
மாற்றி எழுதுதம்மா…
ஆண் : உயிரை கொடுத்தாக்கா…
மண்ணோடு புதஞ்சுடுன்னு…
தன்னையே கொடுக்குதம்மா…
நாட்டுக்காக கன்னிப் பொண்ணு…
—BGM—
Notes : Pethava Kanneeru Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Mayil. பெத்தவ கண்ணீரு பாடல் வரிகள்.