Siragadikkum Nilavu Song Lyrics in Tamil

சிறகடிக்கும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & ரீட்டாமணி சர்மாசுறா

Siragadikkum Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…

BGM

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…
சில நேரம் யாரைக் கேட்டு…
எனக்குள்ளே நீ சென்றாய்…

பெண் : என் கால்கள் தனியாக…
உன் பின்னே செல்கிறதே…
என் நெஞ்சம் துணியாக…
உன் வழியில் கிடக்கிறதே…

ஆண் : சூரியனை தின்ற…
மல்லிகையும் நீதான்…

பெண் : வெண்ணிலவை தோளில்…
சுமந்தவனும் நீதான்…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…

BGM

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…
அழகான தவறுகள் கூட…
நீ செய்ய பிடிக்கிறதே…

பெண் : அறியாத குழந்தை போல…
என் மனது குதிக்கிறதே…
ஏதேதோ வேண்டும் என்று…
அடம் பிடித்து கேட்கிறதே…

ஆண் : பட்டியலை எழுது…
தருகிறேன் நானே…

பெண் : ஒட்டுமொத்த தேவை…
நீ ஒருவன்தானே…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : புன்னகைகள் சிந்தும்…
பொன்நகையும் நீதான்…

பெண் : பெண்ணுலகம் ரசிக்கும்…
பேரழகன் நீதான்…


Notes : Siragadikkum Nilavu Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Snehan. சிறகடிக்கும் நிலவு பாடல் வரிகள்.