பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கலை குமார் | ஹரிஹரன் | எஸ். ஏ. ராஜ்குமார் | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் |
Eatho Oru Pattu Song Lyrics in Tamil
ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…
ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…
ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
—BGM—
ஆண் : கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே…
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே…
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே…
ஆண் : அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்…
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்…
ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
—BGM—
ஆண் : தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே…
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே…
தொட்டால் சுருங்கி பார்த்தால்…
உந்தன் வெட்கம் ஞாபகமே…
ஆண் : அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்…
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்…
ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
ஆண் : என் கண்களின் இமைகளிலே…
உன் ஞாபகம் சிறகடிக்கும்…
நான் சுவாசிக்கும் மூச்சினிலே…
உன் ஞாபகம் கலந்திருக்கும்…
ஆண் : ஞாபகங்கள் மழையாகும்…
ஞாபகங்கள் குடையாகும்…
ஞாபகங்கள் தீமூட்டும்…
ஞாபகங்கள் நீரூற்றும்…
ஆண் : ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்…
—BGM—
Notes : Eatho Oru Pattu Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Kalaikumar. ஏதோ ஒரு பாட்டு பாடல் வரிகள்.