பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் |
Vaanampadi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வானம்பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…
பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…
பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…
பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…
பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…
—BGM—
பெண் : திரும்பும் எந்த திசையிலும்…
என் பாடல்கள் கேட்குமே…
விரும்பும் நேயர் வரிசையிலே…
குயில்களும் சேருமே…
பெண் : உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம்…
என் பாடல்கள் கேட்டபடி…
கிளைகளுக்கே திரும்புதடி…
அந்த இயற்கையும் வியக்குதடி…
பெண் : பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி…
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி…
பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…
—BGM—
பெண் : வாசல் தேடி வந்ததடி…
சொர்கமே சொர்கமே…
வானம் கூட தொட்டு விடும்…
தூரமே தூரமே…
பெண் : கனவுகளின் பேரெழுதி…
ஒரு தேவதை வாங்கி கொண்டாள்…
நிமிடத்துக்கு ஒன்றுயென…
அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்…
பெண் : கோயில் மணிகளே என்னை…
வாழ்த்திட ஒலி கொடுங்கள்…
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது…
பூமழை பொழிகிறது…
பெண் : வானம் பாடி என் வாழ்விலே சூர்யோதயம்…
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்…
பெண் : ஒரு சிலையின் காதில் நான் பாட…
அது உயிரும் வந்து நடமாட…
ஒரு செடியின் காதில் நான் பாட…
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட…
பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…
பெண் : வானவில் வந்தது…
வசந்தமும் வந்தது…
பாட்டுக்கள் கேட்பதற்கு…
—BGM—
Notes : Vaanampadi Song Lyrics in Tamil. This Song from Unnidathil Ennai Koduthen (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. வானம்பாடி பாடல் வரிகள்.