மன்னவனே மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகோட்டை வாசல்

Mannavane Mannavane Song Lyrics in Tamil


BGM

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

ஆண் : சின்னக்கிளி அன்னக்கிளி…
சேல கட்டும் வண்ண கிளி…
என்ன வேணும் கேளு…
நான் தரவா தரவா…

பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

BGM

ஆண் : ராசாத்தி எனத்தொடத்தான்…
லேசாக விரல் படத்தான்…
ஆறாத காயம் எல்லாம் ஆறிப்போகுமே…

பெண் : ராசா உன் உடம்புலதான்…
பூங்காத்து ஒரசிடத்தான்…
பாத்தாலே ஏம்மனசு பதறிப் போகுமே…

ஆண் : சாமியுண்டு காவலுக்கு…
அச்சப்பட தேவயில்ல…

பெண் : மாமன் மேல ஈ எறும்பு…
மொச்சாலும்தான் தாங்கவில்ல…

ஆண் : கலையாத வாசம்…
நான் கொண்டாடும் நேசம்…

பெண் : நிலையான உறவென்று வரலாறு பேசும்…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

BGM

பெண் : தாயாக தவிச்சிருந்தேன்…
தவமான தவமிருந்தேன்…
தாலாட்டும் பாக்கியத்த தந்த மன்னவா…

ஆண் : நான்தான் உன் தலப்ரசவம்…
நலமாக தெனம் தெனமும்…
ஆத்தால வேண்டி வந்தேன் போதுமல்லவா…

பெண் : உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல…
வார்த்த இல்ல…

ஆண் : உன்ன இன்றி வாழ்வதற்க்கு…
மண்ணில் ஒரு வாழ்க்க இல்ல…

பெண் : உசுராகத்தானே நான் உறவாடுவேனே…
ஆண் : ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…

ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…


Notes : Mannavane Mannavane Song Lyrics in Tamil. This Song from Kottai Vaasal (1992). Song Lyrics penned by Kalidasan. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading