பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
காளிதாசன் | கே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம் | தேவா | கோட்டை வாசல் |
Mannavane Mannavane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…
ஆண் : சின்னக்கிளி அன்னக்கிளி…
சேல கட்டும் வண்ண கிளி…
என்ன வேணும் கேளு…
நான் தரவா தரவா…
பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…
ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…
பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…
—BGM—
ஆண் : ராசாத்தி எனத்தொடத்தான்…
லேசாக விரல் படத்தான்…
ஆறாத காயம் எல்லாம் ஆறிப்போகுமே…
பெண் : ராசா உன் உடம்புலதான்…
பூங்காத்து ஒரசிடத்தான்…
பாத்தாலே ஏம்மனசு பதறிப் போகுமே…
ஆண் : சாமியுண்டு காவலுக்கு…
அச்சப்பட தேவயில்ல…
பெண் : மாமன் மேல ஈ எறும்பு…
மொச்சாலும்தான் தாங்கவில்ல…
ஆண் : கலையாத வாசம்…
நான் கொண்டாடும் நேசம்…
பெண் : நிலையான உறவென்று வரலாறு பேசும்…
பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…
—BGM—
பெண் : தாயாக தவிச்சிருந்தேன்…
தவமான தவமிருந்தேன்…
தாலாட்டும் பாக்கியத்த தந்த மன்னவா…
ஆண் : நான்தான் உன் தலப்ரசவம்…
நலமாக தெனம் தெனமும்…
ஆத்தால வேண்டி வந்தேன் போதுமல்லவா…
பெண் : உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல…
வார்த்த இல்ல…
ஆண் : உன்ன இன்றி வாழ்வதற்க்கு…
மண்ணில் ஒரு வாழ்க்க இல்ல…
பெண் : உசுராகத்தானே நான் உறவாடுவேனே…
ஆண் : ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே…
பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…
பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…
ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…
பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…
Notes : Mannavane Mannavane Song Lyrics in Tamil. This Song from Kottai Vaasal (1992). Song Lyrics penned by Kalidasan. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.