Semeena Song Lyrics in Tamil

செம்மீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஆனந்த பூங்காற்றே

Semeena Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM

ஆண் : இருளைப் பின்னிய குழலோ…
இருவிழிகள் நிலவின் நிழலோ…
பொன் உதடுகளின் சிறுவரியில்…
என் உயிரைப் புதைப்பாளோ…

ஆண் : ரவிவர்மன் தூரிகை எழுத்தோ…
இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ…
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்…
நான் உருண்டிட மாட்டேனோ…

ஆண் : பூமி கொண்ட பூவையெல்லாம்…
இரு பந்தாய் செய்தது யார் செயலோ…
சின்ன ஓவியச் சிற்றிடையோ…
அவள் சேலை கட்டிய சிறு புயலோ…

ஆண் : என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்…
அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்…
பெண் : தாரரரா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM

ஆண் : அவளே என் துணையானால்…
என் ஆவியை உடையாய் நெய்வேன்…
அவள் மேனியில் உடையாய்த் தழுவி…
பல மெல்லிய இடம் தொடுவேன்…

ஆண் : மார்கழி மாதத்து இரவில்…
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்…
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை…
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்…

ஆண் : மோகம் தீர்க்கும் முதலிரவில்…
ஒரு மேக மெத்தை நான் தருவேன்…
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்…
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்…

ஆண் : அவள் நடந்தாலோ…
இடை அதிர்ந்தாலோ…
குழல் உதிர்க்கிற பூவுக்கும்…
பூஜைகள் புரிவேன்…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM


Notes : Semeena Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. செம்மீனா பாடல் வரிகள்.