rasaali-rasaali-song-lyrics

ராசாளி ராசாளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்ய பிரகாஷ் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Rasaali Rasaali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…

பெண் : பறவை போல் ஆகினேன்…
போல் ஆகினேன் இன்று…
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
நீ முந்தியா நான் முந்தியா…
பார்ப்போம் பார்ப்போம்…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

—BGM—

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

—BGM—

பெண் : நின்னுக் கோரி…
நின்னுக் கோரி… நின்னுக் கோரி…
ஓ நான் உஷா…
நின்னுக் கோரி…
உன்னால் நான்…
நின்னுக் கோரி கோரி…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

ஆண் : என் தோள் மீது நீ…
நான் குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…


Notes : Rasaali Rasaali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. ராசாளி ராசாளி பாடல் வரிகள்.