பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம். சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | மன்னாதி மன்னன் |
Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
—BGM—
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
—BGM—
ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்… ஆஆ… ஆஆ…
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து…
கல்லினை வைத்தான் சேர மகன்…
ஆண் : இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி…
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே…
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
—BGM—
ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை… ஆஆஆ…
கருவினில் வளரும் மழலையின் உடலில்…
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…
ஆண் : களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்…
காத்திட எழுவான் அவள் பிள்ளை…
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
—BGM—
ஆண் : வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
மக்களின் மனதில் நிற்பவர் யார்…
ஆண் : மாபெரும் வீரர் மானம் காப்போர்…
சரித்திரம் தனிலே நிற்கின்றார்…
ஆண் : அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
தாயகம் காப்பது கடமையடா…
ஆண் : அச்சம் என்பதுமடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
Notes : Acham Enbathu Madamaiyada Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்.