கண்கள் இரண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திமன்னாதி மன்னன்

Kangal Irandum Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…

பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…

பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…

BGM

பெண் : நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…

பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…

பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…

பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…


Notes : Kangal Irandum Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. கண்கள் இரண்டும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top