Pethu Eduthavathaan Song Lyrics in Tamil

பெத்து எடுத்தவதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமலேசியா வாசுதேவன்இளையராஜாவேலைக்காரன் (1987)

Pethu Eduthavathaan Song Lyrics in Tamil


ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

BGM

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
தத்து கொடுத்துப்புட்டா…

BGM

ஆண் : வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை…
மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை…
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை…
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை…

ஆண் : தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை…
தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை…
கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல…
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை…

ஆண் : சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்…
காவிரி கங்கை ஆறுகள் போல…
கண்களும் இங்கே நீராட…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

BGM

ஆண் : தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே…
தலையில எழுதிவச்ச அந்த விரல் பார்த்தேனா…
கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது…
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது…

ஆண் : சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே…
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே…
சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே…
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே…

ஆண் : ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு…
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு…
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே…
காட்டுங்க எங்க தாய்ப்போல…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…


Notes : Pethu Eduthavathaan Song Lyrics in Tamil. This Song from Velaikaran (1987). Song Lyrics penned by Mu. Metha. பெத்து எடுத்தவதான் பாடல் வரிகள்.