penne-kadhal-song-lyrics-in-tamil

பெண்ணே காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.கேதேவாபம்மல் கே. சம்பந்தம்

Penne Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் பார்த்ததுண்டோடி…

ஆண் : பெண் என்றால்…
ஆணுலகம் கவிதை என்கிறதே…
கவிதை ஓர் கை வாளாய்…
ஆளை கொள்கிறதே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

ஆண் : உண்மையில் நீ பூ பந்தோ… ஓஓ…
ஊர் எரிக்கும் தீ பந்தோ… ஓஓ…
ஆணின் நெஞ்சம் அம்மம்மா… ஓஓ…
நீ அடிக்கும் கார் பந்தோ…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : உன் மீது காதல் வைத்து…
உயிர் உனக்கு என்றான்… ஹோ…
அம்மா நீ எய்தும் கூட…
அதை பொறுத்து நின்றான்…

ஆண் : உந்தன் மீது குற்றம் ஏதும்…
விழாமல் செய்தான்…
உள் மனதில் கண்ணீர் வெள்ளம்…
விடாமல் பெய்தான்…

ஆண் : கை அணைத்து கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
காலகாலம் ஆணின் பாவம்…
வாராதோ பெண்ணே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : விட்டதை மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்… ஹோ…
தொட்டதை மீண்டும் தொட்டு…
தொடர்கின்றதோ எண்ணம்…

ஆண் : பொத்தி பொத்தி வைத்தால் கூட…
பொல்லாத காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்…

ஆண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காய பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…
கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…

ஆண் : உன்னாலே ஓர் நிஜமே…
நிழலாய் போகிறதே…
அம்மம்மா ஓர் இதயம்…
தழலாய் வேகிறதே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…


Notes : Penne Kadhal Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. பெண்ணே காதல் பாடல் வரிகள்.