பனி விழும் இரவு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமௌன ராகம்

Panivizhum Iravu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது…
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது…
வா வா வா…

பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…

BGM

பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க…
ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க…

பெண் : மாலை விளக்கேற்றும் நேரம்…
மனசில் ஒரு கோடி பாரம்…

ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்…

பெண் : தனிமையே போ இனிமையே வா…
நீரும் வேரும் சேர வேண்டும்…

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…

BGM

ஆண் : காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது…
பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது…

ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும்…
அங்கம் தாளாமல் துள்ளும்…

பெண் : என்னைக் கேட்காமல் ஓடும்…
இதயம் உன்னோடு கூடும்…

ஆண் : விரகமே ஓா் நரகமோ சொல்…
பூவும் முள்ளாய் மாறிப் போகும்…

பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது…
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது…
வா வா வா…

ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு…


Notes : Panivizhum Iravu Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali. பனி விழும் இரவு பாடல் வரிகள்.