பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | தேவா | சூரியன் |
Pathinettu Vayathu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது…
ஏங்குது பாய் போட…
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு…
ஏங்குது உறவாட…
பெண் : கங்கை போலே காவிரி போலே…
ஆசைகள் ஊறாதா…
சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு…
ஜாடையில் கூறாதா…
பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது…
ஏங்குது பாய் போட…
—BGM—
ஆண் : மாணிக்கத் தேரு…
மணிமுத்து ஆறு…
மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு…
போதும் போதும் நீ ஒதுங்கு…
அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு…
பெண் : நான் விட மாட்டேன்…
தூண்டிலைப் போட்டேன்…
காலந்தோறும் நீ எனக்கு…
ஆண் : ஹைய்யோ…
பெண் : இது கால தேவனின் கணக்கு…
ஆண் : கூசுது உடம்பு குலுங்குது நரம்பு…
நீ என்னை உரசாதே… ஹோ…
பெண் : கூச்சங்கள் எதுக்கு…
ஆண்மகன் உனக்கு…
நீ என்னை விலகாதே…
பெண் : ராத்திரி நமக்கு முதல் ராத்திரி…
பால் பழம் கொண்ட பாத்திரம்…
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா…
குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு…
தலையணை சிரிக்காதா…
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா…
தாமரை வெடிக்காதா…
—BGM—
பெண் : மாங்கனிச் சாறும்…
செவ்விள நீரும்…
மாங்கனிச் சாறும் செவ்விள நீரும்…
மேலும் கீழும்தான் இனிக்க…
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க…
ஆண் : மூக்குத்திப் பூவே மோக நிலாவே…
தேனை வாரி நீ தெளிக்க…
அதில் தாகம் தீர நான் குளிக்க…
பெண் : மன்மத பாணம் பாயுற நேரம்…
வீரத்தை நிலை நாட்டு… ஹோ…
ஆண் : மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்…
வாலிப விளையாட்டு…
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்…
தீண்டினாள் எனைத் தூண்டினாள்…
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்…
குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே…
மாப்பிள்ளை நீயாச்சு…
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று…
விடுமுறை நாளாச்சு…
பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது…
ஏங்குது பாய் போட…
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு…
ஏங்குது உறவாட…
Notes : Pathinettu Vayathu Song Lyrics in Tamil. This Song from Suriyan (1992). Song Lyrics penned by Vaali. பதினெட்டு வயது பாடல் வரிகள்.