முதல்வனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Mudhalvaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…

BGM

பெண் : ஓ… காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
வாளின் ஓசை கேட்கும் தலைவா…
வளையலோசை கேட்கவில்லையா…

பெண் : முதல்வா… முதல்வா…
குழு : ஹா முதல்வா…

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

BGM

பெண் : ஆ… கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி…
குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்…

ஆண் : ஆ… பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து…
கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்…

பெண் : உலகம் வாழ நிதி ஒதுக்கு…
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு…

ஆண் : அரசன் வாழ விதி இருக்கு…
அதற்கு நீதான் விதி விலக்கு…

பெண் : மன்னனே… மன்னனே இதோ இவள் உனக்கு…

குழு : முதல்வா வா முதல்வா முதல்வா வா வா முதல்வா…
முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா…

BGM

ஆண் : முதல்வா… முதல்வா… ஹே ஹே…

பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்…
பள்ளியறை வர நேரமில்லையா…

ஆண் : ஓ… ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி…
உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா…

பெண் : ஆசைப்பூவை தவிக்க விட்டு…
அமைச்சரோடு நகா்வலமோ…

ஆண் : உனது கண்ணில் நீா் துடைத்தால்…
ஊா்க்குழாயில் நீா் வருமோ…

பெண் : வேந்தனே… வேந்தனே உந்தன் வரம் வருமோ…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
ஆண் : ஹே…

பெண் : காதல் பஞ்சம் வந்து…
ஆண் : நொந்தாயோ…
பெண் : முத்த நிவாரணம்…
ஆண் : உனக்கு அளிப்பான்…

பெண் : வாளின் ஓசை…
ஆண் : தீரும் போது…
பெண் : வளையலோசை…
ஆண் : கேட்கவருவான்…

குழு : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

BGM


Notes : Mudhalvaney Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்வனே பாடல் வரிகள்.