manasellam-mazhaiye-song-lyrics-in-tamil

மனசெல்லாம் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Manasellam Mazhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

ஆண் : என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…

ஆண் : என் கண்ணில் வந்து…
நின்று என்னை பறித்தாய்…
என்னாகும் உயிரே உயிரே…

ஆண் : இரவில் வந்தது சந்திரனா…
என் அழகே வந்தது உன் முகம்தான்…
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே…
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா…

பெண் : பகலில் எாிப்பது சூரியனா…
என் அழகே உன் இரு பார்வைகள்தான்…
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்…
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : வானில் போகும் பறவைகளாய்…
நீயும் நானும் பிறந்திடலாம்…
உலகையே மறக்கலாம்…

பெண் : ஹா… வேறு வேறு விண்வெளியில்…
மாறி மாறி பிாிந்திடலாம்…
பறக்கலாம் மிதக்கலாம்…
காற்றாகி கை கோர்த்து போவோமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

பெண் : கனவில் வாழ்வது சாத்தியமா…
என் எதிரே நடப்பது மந்திரமா…
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா…
என் தேகம் எங்கு நீந்தி போகுதோ…

ஆண் : கனவில் வாழ்வது சாத்தியமே…
என் கனவும் பலிப்பது நிச்சயமே…
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே…
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : காதலாகி கரைந்துவிட்டால்…
காலம் நேரம் மறந்திடுமே…
வானிலை மாறுமே…

பெண் : ஏழு வண்ண வானவில்லில்…
நூறு வண்ணம் தோன்றிடுமே…
யாவுமே மாயமே…
வெயிலோடு மழை வந்து தூறுமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

ஆண் : தரையில் விண்மீன் வருவதில்லை…
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை…
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை…
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்…

பெண் : தரையில் விண்மீன் வருவதுண்டு…
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு…
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு…
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே… ஓஓ…

பெண் : மனசெல்லாம் மழையே…

BGM


Notes : Manasellam Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. மனசெல்லாம் மழையே பாடல் வரிகள்.