யாரது யாரது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & சுசித்ராவித்யாசாகர்காவலன்

Yaarathu Yaarathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

BGM

ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…

BGM

ஆண் : கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…

BGM

ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…
கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…

ஆண் : இரவிலும் அவள்…
பகலிலும் அவள்…
மனதினை தொடுவது தெரிகிறதே…

ஆண் : கனவிலும் அவள்…
நினைவிலும் அவள்…
நிழலென தொடர்வது புரிகிறதே…

ஆண் : இருந்தாலும் இல்லா அவளை…
இதயம் தேடுதே…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

BGM

ஆண் : உச்சந்தலை நடுவினில் அவள்…
ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்…
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்…
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்…

ஆண் : அவள் இவள் என…
எவள் எவள் என…
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்…

ஆண் : அவளது முகம்…
எவளையும் விட…
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்…

ஆண் : இருந்தாலும் இல்லாமல்…
அவள் கலகம் செய்கிறாள்…

ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…

ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது…

ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…

ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…


Notes : Yaarathu Yaarathu Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Yugabharathi. யாரது யாரது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top