malare-oru-varthai-song-lyrics-in-tamil

மலரே ஒரு வார்த்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்சிவாபூமகள் ஊர்வலம்

Malare Oru Varthai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM

ஆண் : காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ…
வெட்கம்தான் முந்தானையோ…
மௌனம்தான் உன் வேலியோ…
செம்பூவே வா வா வா வா…

பெண் : விழியே ஒரு வார்த்தையானால்…
மொழி என்பது வேண்டாமே…

BGM

ஆண் : வார்த்தையாடி பார்த்தபோது…
காதல் வரவில்லை…
காதல் வந்து சேர்ந்தபோது…
வார்த்தை வரவில்லை…

பெண் : நான்கு கண்கள் பேசும்போது…
தாய்மொழிக்கு இடமில்லை…
மௌனம் பாடும் பாடல் போலே…
மனதுக்கு சுகமில்லை…

ஆண் : மலர்களை எறிப்பது முறையில்லை…
மௌனத்தை உடைப்பது சரியில்லை…
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்…
வார்த்தைகள் புரிவது எளிதில்லை…

பெண் : கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே…
நெஞ்சு பிடிக்குது முல்லை…
வெளியில் சொல்லவில்லை…

ஆண் : வெட்க படாத பூக்களை…
வண்டுகள் தொடாதடி…
முத்தம் தராமல் வெட்கம்…
சாயம் போகாதடி…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM

பெண் : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்…
பெண்ணுக்கு தெரியாது…
ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும்…
அவசியம் புரியாது…

ஆண் : காதல் மங்கை சொன்ன வார்த்தை…
கவிதையில் கிடையாது…
அட காதலிக்கும் ஆட்கள் போல…
கவிஞர்கள் கிடையாது…

பெண் : இரவிலே தாமரை மலராது…
பகலிலே அல்லியும் அவிழாது…
இதயப்பூ எப்போதும் மலரும் என்று…
இதுவரை சொன்னவர் கிடையாது…

ஆண் : ஏய்… ராஜமோகினி ரம்பா ரம்பா…
உன் எடைக்கெடை தங்கம்…
தரத்துடிக்கும் நெஞ்சம்…

பெண் : கைகள் தொடாமல் கண்களால்…
நெஞ்சை பந்தாடினாய்…
ரத்தம் வராமல் பார்வையால்…
என்னை துண்டாடினாய்…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM

ஆண் : காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ…
வெட்கம்தான் முந்தானையோ…
மௌனம்தான் உன் வேலியோ…
செம்பூவே வா வா வா வா…

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…

BGM


Notes : Malare Oru Varthai Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. மலரே ஒரு வார்த்தை பாடல் வரிகள்.