கண்ணில் உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. எஸ். சித்ராதேவாகனவே கலையாதே

Kannil Unnai Song Lyrics in Tamil


குழு : கண்ண பிராணனின் கண்ணிலிருக்க…
கனவே கலையாதே…
நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க…
கனவே கலையாதே…

குழு : கண்ணன் வரும் வரை காத்திருப்பாள்…
இந்த கண்மணி ராதை…
கண்ணன் வருவான் காதினில் சொல்வான்…
காதலின் கீதை…

BGM

பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கங்கைக்கரை காற்றை கேளு…
கண்ணபெருமானே…
காதல் செய்த காலம் எல்லாம்…
காதில் கூறும்தானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…

BGM

பெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ…
இளமனம் எனும் மலர்வனம் துளிர் விட…
தினம் தினம் அவன் இங்கு வருவானா…

பெண் : இனியும் ஒரு அறிமுகமா…
இருவருமே புது முகமா…
அவன் இங்கு வருவானா தோழி…
அடைக்கலம் தருவானா…

பெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று…
கூச்சம் தீர கூடிடும் இரவினில்…
அவன் இங்கு வருவானா…

பெண் : கண்ணா மழை வண்ணா…
கண்ணா மழை வண்ணா…
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்…

பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…

BGM

பெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை…
இன்று தொடங்கிட தொடங்கிட…
தொடர்ந்திட தொடர்ந்திட…
புது சுகம் அரும்பாதோ…

பெண் : புயல் அடித்தா நிலவனையும்…
மழை அடித்தா மலை கரையும்…
உனக்கிது தெரியாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா…

பெண் : மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை…
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது…

பெண் : உன்னை இங்கு என்னை…
உன்னை இங்கு என்னை…
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க…

பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…

பெண் : பிறவி உனக்காக எடுத்த கிளி…
மனதை உனக்காக கொடுத்த கிளி…
இனியும் தனியாக தவித்தபடி…
இருக்க விடலாமோ தலைவன் மடி…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…


Notes : Kannil Unnai Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் உன்னை பாடல் வரிகள்.