பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே. எஸ். சித்ரா | தேவா | கனவே கலையாதே |
Kannil Unnai Song Lyrics in Tamil
குழு : கண்ண பிராணனின் கண்ணிலிருக்க…
கனவே கலையாதே…
நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க…
கனவே கலையாதே…
குழு : கண்ணன் வரும் வரை காத்திருப்பாள்…
இந்த கண்மணி ராதை…
கண்ணன் வருவான் காதினில் சொல்வான்…
காதலின் கீதை…
—BGM—
பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…
பெண் : கங்கைக்கரை காற்றை கேளு…
கண்ணபெருமானே…
காதல் செய்த காலம் எல்லாம்…
காதில் கூறும்தானே…
பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…
—BGM—
பெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ…
இளமனம் எனும் மலர்வனம் துளிர் விட…
தினம் தினம் அவன் இங்கு வருவானா…
பெண் : இனியும் ஒரு அறிமுகமா…
இருவருமே புது முகமா…
அவன் இங்கு வருவானா தோழி…
அடைக்கலம் தருவானா…
பெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று…
கூச்சம் தீர கூடிடும் இரவினில்…
அவன் இங்கு வருவானா…
பெண் : கண்ணா மழை வண்ணா…
கண்ணா மழை வண்ணா…
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்…
பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…
பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
—BGM—
பெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை…
இன்று தொடங்கிட தொடங்கிட…
தொடர்ந்திட தொடர்ந்திட…
புது சுகம் அரும்பாதோ…
பெண் : புயல் அடித்தா நிலவனையும்…
மழை அடித்தா மலை கரையும்…
உனக்கிது தெரியாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா…
பெண் : மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை…
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது…
பெண் : உன்னை இங்கு என்னை…
உன்னை இங்கு என்னை…
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க…
பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…
பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
பெண் : பிறவி உனக்காக எடுத்த கிளி…
மனதை உனக்காக கொடுத்த கிளி…
இனியும் தனியாக தவித்தபடி…
இருக்க விடலாமோ தலைவன் மடி…
பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…
Notes : Kannil Unnai Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் உன்னை பாடல் வரிகள்.