இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.