எனக்கென ஒருவரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜாஇளையராஜாதாலாட்டு

Enakena Oruvarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…

BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

ஆண் : பூமிதான்டா நம்ம தாயி…
வீதிதான்டா நம்ம வீடு…
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

BGM

ஆண் : பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது…
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது…
தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா…
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா…

ஆண் : அடி அம்மா அடி அம்மா…
நீ பேசும் தெய்வமா…
இது பாவம் பெரும் பாவம்…
இத தெய்வம் செய்யுமா…
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

BGM

பெண் : பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது…
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது…
ஆறு காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது…
அன்பு காய்ஞ்சி போயிருந்தா வாழ்க்கை என்னஆவது…

பெண் : அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே…
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கலே…
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…


Notes : Enakena Oruvarum Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்.