Category Archives: ஜெயில்

boomikku-nee-vandha-song-lyrics

பூமிக்கு நீ வந்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சைந்தவி & ரவி.ஜிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Boomikku Nee Vandha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

ஆண் : நானா கேட்டேன் இந்த வாழ்க்கையை…
நீயே தந்தாய் தாயே… ஓ ஓ…
என்னை பாரமாய் எண்ணினாயோ நீ…
உந்தன் சேய் நான் பாவம் அம்மா…

பெண் : உனக்காக நானும்தான்…
உயிர் வாழ்ந்த காலம்தான்…
எல்லாமே நீயாகி நின்றேனடா…
உன்னை பூமிப்பந்தில் சேர்க்கவே…
இந்த ஜென்மம் கொண்டேனடா…

ஆண் : பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

BGM

ஆண் : சூரியன் உடைந்து…
சூரியன் உடைந்து பகலற்றுப் போனேன்…
வானம்தான் கிழிந்து இரவற்று போனேன்…
நீ இன்றி நானே பொய்யனேனே…
நிழலின்றி நானும் தனியானேனே…

ஆண் : தொலைந்தேன் தொலைத்தேன்…
உனை ஏன் தொலைத்தேன்…
ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாக வந்தாலும்…
உலகத்தில் உறவெல்லாம் ஒன்றாகி நின்றாலும்…
உன்னைப்போல எனைக்காக்க யாரும் இல்லையே…


Notes : Boomikku Nee Vandha Song Lyrics in Tamil. This Song from Jail (2021). Song Lyrics penned by Snehan. பூமிக்கு நீ வந்த பாடல் வரிகள்.


நகரோடி நாங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅனன்யா பட், அறிவு & ஜி. வி. பிரகாஷ்குமார்ஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Nagarodi Song Lyrics in Tamil


பெண் : ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்…
வேறு யாரோ ஆகுறோம் பூமியே…
நாதியத்து நியாம் கேட்டு காயம் தாங்குறோம்…
காலம் பூரா ஏங்குறோம் சாமியே…

ஆண் : கூரை மேல காகம் சேர தூறும் எங்க சேரி வானம்…
ஊர விட்டு ஓரம் போக கூறும் இந்த நாடு நாளும்…

பெண் : மூச்சு நின்னு போச்சு என் மண்ணே…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
வெகுதூரம் போன நகரோடி…
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…

பெண் & குழு (ஆண்கள்) : நகரோடி நாங்கா நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

ஆண் : சொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்ல…
தூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்ல…
அடைத்து வைத்தாரு நம்மை இந்த ஜெயிலிலே…
முளைத்தெழுந்து வா உண்மையை உரைக்க சொல்ல…

ஆண் : நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்…
தலைமுறைக்கும் இருக்கும் வலிகொடுத்த ரணம்…
கல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்…
சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்…

ஆண் : பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே…
ஊரு போயி சேர என்னோட மூச்சு ஏங்குதே…
கண்ட துண்டமாக எம் வேரைக் கூறு போடுதே…
வந்தவர்கள் வாழ நம்மை வந்தேரி ஆக்குதே…

பெண் : நகரோடி நாங்கா நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

BGM

ஆண் : கைவீசம்மா கைவீசு நீயும்…
கையேந்த தான் வெச்சானே நாளும்…
எட்டாக்கனி ஏழைக்கு நீதி தப்பாக்கு நீ…

ஆண் : செத்த பின்னே சொர்க்கத்த சேர…
கத்திக்கிட்டோம் மன்னித்து வாழ…
செத்தாலும் மண்ணை விட்டுத்தான் தராத நீ…

ஆண் : கோட்டையெல்லாம உன் வேர்வையால
சாப்பிடல நீ மூன்று வேள…
ரத்தம் மொத்தம் உறிஞ்சிக்கிட்டு குப்பையென வீச…

ஆண் : இழக்கத்தான் உனக்குத்தான்…
எதுவுமே இல்ல இல்ல இனி…
அடக்கித்தான் ஒடுக்கிட்டான் ஒடச்சிட்டான்…
சிறை இல்லை இனி…

ஆண் : கழுத்தை நெறித்தால் பலத்தை திரட்டு…
உடமை பறித்தால் உரிமை முழக்கு…
இருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்பு…
இருக்கும் இடந்தான் நமக்கு உயிர் மூச்சு…

பெண் : ஓ… ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்…
வேறு யாரோ ஆகுறோம் பூமியே…
நாதியத்து நியாம் கேட்டு காயம் தாங்குறோம்…
காலம் பூரா ஏங்குறோம் சாமியே…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
வெகுதூரம் போன நகரோடி…
நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…

பெண் : நகரோடி நாங்க நகரோடி…
நதியோரக் கர நகரோடி…
எழந்தோமே எங்க கடவீதி எது மீதி…

BGM


Notes : Nagarodi Song Lyrics in Tamil. This Song from Jail (2021). Song Lyrics penned by Arivu. நகரோடி நாங்க பாடல் வரிகள்.


பத்து காசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Pathu Kaasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பெத்த தாய போல வந்து துடிப்பானடா…
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு…
இதயம் துடிக்கும்…
அது நட்பு நட்பு நட்புனுதான்…
எப்போதும் நினைக்கும்…

ஆண் : லப்பு டப்பு லப்பு டப்பு…
இதயம் துடிக்கும்…
அது நட்பு நட்பு நட்புனுதான்…
எப்போதும் நினைக்கும்…

ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா…
என் நண்பன போல்…
ஒரே சொந்தம் இங்கே யாருடா…

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பெத்த தாய போல வந்து துடிப்பானடா…
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா…

BGM

ஆண் : பட்டுனு போன்ன போட்டா வந்து நிப்பான் முன்னாடி…
பிரெண்டுனு பேருதானே ஒன்னா நம்பர் கில்லாடி…

ஆண் : கெத்துன்னா கெத்துங்கோ…
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ…
சிக்காம நிக்கிறப்போ வந்துக் கைய குட்த்தாங்கோ…

ஆண் : டக்குனு கைய போட்டா டைட்டானிக்கு நிக்காது…
பிரச்சனை வந்துபுட்டா மச்சான் தானே பேஜாரு…

ஆண் : தந்தையும் தாயும் இந்த ஒரே ஆளுடா…
என் நண்பன போல்…
ஒரே சொந்தம் இங்கே யாருடா…

ஆண் : பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா…
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா…

ஆண் : யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ…
யேஹ்… ஏ… யேஹ்… ஏ…

BGM


Notes : Pathu Kaasu Song Lyrics in Tamil. This Song from Jail(2021). Song Lyrics penned by Arivu. பத்து காசு பாடல் வரிகள்.


காத்தோடு காத்தானேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தனுஷ் & அதிதி ராவ் ஹைதாரிஜி. வி. பிரகாஷ்குமார்ஜெயில்

Kaathodu Kaathanen Song Lyrics in Tamil


ஆண் : ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…
ஓ பெண்ணே… ஓ பெண்ணே…
நீ தானே… நீ தானே…

BGM

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் : காகிதம் போலே ஒன்மேல…
ஓவியம் வரையும் நகமானேன்…
மோகத்தில் பெண்ணே உன்னாலே…
முத்தங்கள் வாழும் முகமானேன்…

ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழைதுளியாய்… கலந்திருந்தோம்…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

பெண் : நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… நானனா…
நானனா… ஆ…

ஆண் : இலையில் மலரின் கைரேகை…
இமைகள் யாவும் மயில்தோகை…

பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்…
ஆனந்த வன்மம் மறவேனே…

ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த…
மயக்கம் தீரவே இல்லை…

பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ…
இறைவன் கைகளில் பிள்ளை…

ஆண் : கண்மணி பூ பூக்க…
காதல் விதையானோம்…

பெண் : காமன் நாட்குறிப்பில்…
காதல் கதையானோம்… ஓ… ஓ…

பெண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

BGM

ஆண் : பூவின் மீது கூத்தாடும்…
போதை வண்டு போலானேன்…

பெண் : புல்லின் மீது பூமியைப்போல்…
உந்தன் பாரம் நான் கண்டேன்…

ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும்போது…
கரைகள் என்பதே இல்லை…

பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை…
கடலே காதலின் எல்லை…

ஆண் & பெண் : வேர்வை துளிகளிலே…
என்னை நனைத்தாயே… ஏ… ஏ…
இதயம் நொறுங்கத்தான்…
இறுக்கி அணைத்தாயே… ஏ… ஏ…

ஆண் : காத்தோடு காத்தானேன்…
கண்ணே உன் மூச்சானேன்…
நீரோடு நீரானேன்…
உன் கூட மீனானேன்…

ஆண் & பெண் : ஆயிரம் ஆசைகள் தாலாட்ட…
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே…
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்…
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்…

ஆண் & பெண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்…
மழை துளியாய் கலந்திருந்தோம்…

BGM


Notes : Kaathodu Kaathanen Song Lyrics in Tamil. This Song from Jail. Song Lyrics penned by Kabilan. காத்தோடு காத்தானேன் பாடல் வரிகள்.