Category Archives: செல்லமே

வெள்ளைகார முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Vellaikkara Mutham Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

BGM

பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்…
கொள்ளை மோச்சம் கொண்டேன்…
செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன்…

பெண் : ஆ… இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்…
நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்…

பெண் : குடைகடியில் நிறைந்துவிட்டேன்…
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்…
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்…

பெண் : வெள்ளைகார முத்தம்…
ஆண் : தனன தனனனன…
பெண் : என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…
ஆண் : தனன தனனனன…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM

பெண் : மோகம் கொண்டு தைத்தான்…
மூச்சு முட்ட வைத்தான்…
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்…

BGM

பெண் : கட்டில்காடு கண்டான்…
கண்ணில் விட்டு கொண்டான்…
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்…

பெண் : உச்சுகொட்டியே உடைந்து விட்டான்…
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்…
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான்…

பெண் : தன்ன னானன் நானா…
என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா…

பெண் : வெள்ளைகார முத்தம்…
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்…

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்…
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்…
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்…
அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில்…
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட…

BGM


Notes : Vellaikkara Mutham Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளைகார முத்தம் பாடல் வரிகள்.


செல்லகிளியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஞ்சித் & அனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Chella Kiliyo Song Lyrics in Tamil


BGM

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஓ… திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்…
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்…
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்…

ஆண் : நம்ம கட்டில் சூடு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ ஆறி போச்சு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : நாம் சிக்கி முக்கி…
கல்லாய் மாறி பற்ற செய்வோமா…

பெண் : என் சோகம் போக…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : என் மோகம் தீர…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : அட ரெட்டை சேவை செய்ய போகும்…
கெட்டிக்காரா கிட்ட வா வா…

ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள…
குழு : ஓஒ ஓஓ…
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள…
பெண் : ஓ… என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்…
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்…
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்…

ஆண் : இனி ஒவ்வொரு இரவு…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : முதல் இரவாய் செய்வோம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி…
இரவை நீட்டிப்போம்…

பெண் : இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்…
நாம் தழுவும் போது சிதறும் துளியில்…
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

ஆண் : ஓஓ… ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே ஓமெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

BGM


Notes : Chella Kiliyo Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. செல்லகிளியோ பாடல் வரிகள்.


Aariya Uthadugal Song Lyrics in Tamil

ஆரிய உதடுகள் உன்னது 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Aariya Uthadugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

பெண் : ஆரிய உதடுகள் என்னது…
திராவிட உதடுகள் உன்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும்…
அதுதான் வெற்றி என்றாகும்…
இதில் நீ வெற்றி பெற வேண்டும்…
மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்… ம்ம்… ம்ம்…

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

BGM

பெண் : எத்தனை உள்ளது பெண்ணில்…
அட எது மிக பிடித்தது என்னில்…
பகல் பொழுதின் பேரழகா…
ராத்திரியின் சூரணமா…

பெண் : மின்னல்கள் சடுகுடு ஆடும்…
கண்ணா கண்ணா…
மேலாடை மேகம் மூடும்…
நெஞ்சா நெஞ்சா…

ஆண் : ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்…
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்…
மோகம் வரும் தருணங்களில்…
முனகலிடும் ஒலி பிடிக்கும்…

ஆண் : கட்டில் மேல் எல்லாம் கலைந்த…
பின்னே பின்னே…
கலையாத கொலுசு ரொம்ப…
பிடிக்கும் பிடிக்கும்…

பெண் : என் நாயகா என்னை பிரிகையில்…
என் ஞாபகம் தலை காட்டுமா…
உன் ஆண் மனம்… ம்ம்… ம்ம்… தடுமாறுமா…
பிற பெண்கள் மேல் மனம் போகுமா…

ஆண் : ஏ… கண்களே நீயாய் போனால்…
வேறு பார்வை வருமா…

பெண் : ஆரிய உதடுகள் என்னது…
திராவிட உதடுகள் உன்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…

ஆண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

BGM

ஆண் : தேவதை புன்னகை செய்தால்…
சிறு தேய்பிறை முழு நிலவாகும்…
குறை குடமாய் நான் இருந்தேன்…
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்…

ஆண் : உன்னோடு மழையாய் வந்து…
பொழிந்தாய் பொழிந்தாய்…
உயிரெல்லாம் ஓடி ஓடி…
நிறைந்தாய் நிறைந்தாய்…

பெண் : ஜீவித நதியென விரைந்தாய்…
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்…
பிறவியிலே தாய் கொடுத்தாய்…
பிறந்த பயன் நீ கொடுத்தாய்…

பெண் : ஆணுக்கு முழுமை என்ன…
பெண்தான் பெண்தான்…
பெண்ணுக்கு முழுமை என்ன…
ஆண்தான் ஆண்தான்…

ஆண் : அடி காற்றினால் வான் நிறையுது…
நம் காதலால் உயிர் நிறையுது…
வளர் ஜோதியே எந்தன் பாதியே…
நீ என்னதான் எதிர் பார்க்கிறாய்…

பெண் : ஜீவனின் மையம் தேடி…
கைகள் மீண்டும் தொடுமா…

ஆண் : ஆரிய உதடுகள் உன்னது…
பெண் : திராவிட உதடுகள் உன்னது…
ஆண் : ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
பெண் : ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…

ஆண் : இதில் யார் தோல்வியுறும் போதும்…
அது தான் வெற்றி என்றாகும்…
இதில் நீ வெற்றி பெற வேண்டும்…

ஆண் & பெண் : மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்… ம்ம்… ம்ம்…


Notes : Aariya Uthadugal Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. ஆரிய உதடுகள் உன்னது பாடல் வரிகள்.


காதலிக்கும் ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே, சின்மயி, டிம்மி & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Kadhalikkum Aasai Song Lyrics in Tamil


BGM

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ…
என் சோனா லிசோ சோனாலி…
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓ…
மை சோனா லிசோ சோனாலி…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

ஆண் : என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்…
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்…
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால்…
திட்டி திட்டி தித்தித்தாய்…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

BGM

ஆண் : சந்திர சூரியர் எழுகையிலே…
உன் முக ஜாடைகள் தெரிகிறதே…
பூமியில் இரவு வருகையிலே…
அழகிய கூந்தல் சரிகிறதே…

ஆண் : சரிகிறதே… விரிகிறதே… ஹே ஹே…

ஆண் : அடி விண்ணும் மண்ணும்…
உனக்குள்ள விளம்பரமோ…
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த…
ஒளி சிற்பமொ…

ஆண் : ஹே… மன்மத மொட்டா…
நான் வருடும் காற்றோ…
மன்மத மொட்டா…
குழு : ஹே ஹெய்ஹே…
ஆண் : நான் வருடும் காற்றோ…
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ…

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை…
கண்கள் உன்னை காணும் வரை…
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…
குழு : ஓஹோ ஹோ ஹோ…

ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்…
பாடம் செய்து ஒப்பித்தேன்…
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்…

BGM

குழு : என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…
என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…

ஆண் : உன் முகம் கொண்ட பருவினிலும்…
வின் மீன் ஒலிகள் வீசுதடி…
கோபம் வழியும் வேளையிலும்…
இதயம் கண்ணில் மின்னுதடி…

ஆண் : மின்னுதடி… என்னை கொல்லுதடி…

ஆண் : எங்கே நின்று காணும் போதும்…
வானம் ஒன்றுதான்…
உன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும்…
பெண்மை நன்றுதான்…

ஆண் : உயிர் விடும் முன்னே…
என்னை காதலி பெண்ணே…
உயிர் விடும் முன்னே…
என்னை காதலி பெண்ணே…
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ…

பெண் : காதலிக்கும் ஆசையில்லை…
கடவுள் வந்து சொன்னாலும்…
ஏமாந்த பெண்ணை தேடி போயா…

பெண் : உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும்…
பட்டை ரோஜா நானல்ல…
முள்ளோடு தேனும் இல்லை போயா…

பெண் : ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை…
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை…
நீ கல்லை தந்து கனியோ என்று…
காதல் செய்வது வீண் வேலை…

குழு : என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…
என் காதலி காதலி காதலி காதலி…
என்னை காதலி காதலி காதலி காதலி காதலி…


Notes : Kadhalikkum Aasai Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. காதலிக்கும் ஆசை பாடல் வரிகள்.


கும்மியடி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசந்தியாஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Kummiyadi Song Lyrics in Tamil


குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…

குழு : தன தந்தனனா தன தந்தனனா…
தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது…
கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி…
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது…
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி…

குழு : எங்க வீட்டு தங்க விளக்கு…
ஏங்கி நிக்குது கும்மியடி…
என்னை ஊற்றி திரிய தூண்ட…
ஆளு வந்தது கும்மியடி…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

BGM

பெண் : அடி செக்க செவந்த அழகா…
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா…
பத்து வருஷம் பக்கம் இருந்தும்…
பார்க்கவில்லைடி நானும்…

பெண் : அந்த ராஜ கதவு திறந்தா…
பல ரகசியமும் தெரிஞ்சா…
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்…
பைத்தியம் ஆக வேணும்…

பெண் : அடி தூக்கி இருக்கும் அழகு…
அவன் தூக்கம் கெடுத்து போகும்…
அடி பாக்கி இருக்கும் அழகு…
உசிர் பாதி வாங்கி போகும்…

பெண் : தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…

பெண் : அடி பஞ்சு மெத்தையில…
குழு : ஒரு பந்தயம் நடக்குமே…
பெண் : அந்த பந்தயம் முடிவிலே…
குழு : அட ரெண்டுமே ஜெய்க்குமே…

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

BGM

பெண் : ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு…
அடி ஆணுக்குள்ளது முறுக்கு…
விடிய விடிய நடந்த கதைய…
விளக்க போகுது விளக்கு…

பெண் : இவ உலகம் மறந்து கிடப்பா…
அடி உறவு மட்டுமே நினைப்பா…
உடுத்தி போன சேலை மறந்து…
வேட்டி உடுத்தி நடப்பா…

பெண் : அடி மோகம் உள்ள புருஷன்…
பல முத்தம் சொல்லி கொடுப்பான்…
இன்னும் போக போக பாரு…
இவ புத்தி சொல்லி கொடுப்பா…

பெண் : தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…
தான தந்தான தந்தானே…

குழு : அடி உங்க வீட்டுக்குள்ள…
லட்சம் குயில் பாடட்டும்…
அடி சலங்கை கட்டிக்கிட்டு…
சந்தோஷம் ஆடட்டும்…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது…
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி…
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது…
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி…

பெண் : எங்க வீட்டு தங்க விளக்கு…
ஏங்கி நிக்குது கும்மியடி…
என்னை ஊற்றி திரிய தூண்ட…
ஆளு வந்தது கும்மியடி…

குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…

குழு : தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…
தந்தனனா தன தந்தனனா…
தன தந்தனனா தன தந்தனனா…


Notes : Kummiyadi Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. கும்மியடி பாடல் வரிகள்.