Category Archives: பூவெல்லாம் உன் வாசம்

Poovellam Unn Vaasam

யுக்தா முகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவன் & கிளிண்டன் செரிஜோவித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Yuktha Mukhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…

BGM

ஆண் : குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

BGM

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

ஆண் : ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா… உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

ஆண் : படம் வரைந்து பாதம் குறிக்க…
உள்ளம் தள்ளாடும்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

BGM

ஆண் : மின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன்…
மேடு பள்ளம் தன்னில் பூகோலம் பார்த்தேன்…
லிப்பில் உள்ள வரியில் லிட்ரேச்சர் பார்த்தேன்…
பார்வை ஈர்க்கும் போது பௌதீகம் பார்த்தேன்…

ஆண் : உன் வெறுப்பில் உள்ளது சுவாலஜி…
உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி…
உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி…
குழு : அழகே…

ஆண் : நீயே ஒரு பல்கலைக்கழகம்…
அதுதான் இனி எங்கள் உலகம்…
அழகே நீ சிலபஸ் ஆனால்…
ஆண் கூட்டம் சென்டம் வாங்கும்…
அன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்…
குழு : கோடி கோடி வசூலாகும்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓ லெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் திபாடி…
ராக் ராக் கிவ் மீ அனதர் வித் எ…

BGM

ஆண் : ஆஷா போஸ்லே சுஷீலா குரல் ஒன்று கூடி…
ஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி…
ஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி நாடி…
நீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி

ஆண் : எங்கள் மனசின் எடை சொல்லும் மலேஸ்வரி…
உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீஸ்வரி…
ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீஸ்வரி…
குழு : அன்பே…

ஆண் : அழகழகாய் உன்னை பெற்ற…
அத்தைக்கு வணக்கம் வைப்போம்…
நலுங்காம டெலிவரி பார்த்த…
நர்சுக்கு முத்தம் வைப்போம்…
வெண்ணிலவு தலையில் இடிக்க…
கண்ணே உனக்கு டாப் வைப்போம்…

குழு : ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓலெட் மீ சி யூ க்ரூவ்…
ராக் ராக் ஷேக் தி பாடி…
ராக் ராக் ஓலெட் மீ சி யூ க்ரூவ்…

ஆண் : யுக்தா முகி யுக்தா முகி யுக்தா முகி நீயா…
குக்கூ கு கு குக்கூ கூ என கூவும் குயில் நீயா…

ஆண் : ஐயோ உன் குரலை கேட்டால்…
ரத்தத்தில் சக்கரை ஏறும்…
ஆஹா உன் அழகை பார்த்தால்…
அருவிகளும் மலை மேலேறும்…

ஆண் : படம் வரைந்து பாதம் குறிக்க…
உள்ளம் தள்ளாடும்…

குழு : ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…
ராக் ராக் ராக் ராக்…

பெண் : ஐ லைக் இட்…


Notes : Yuktha Mukhi Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. யுக்தா முகி பாடல் வரிகள்.


புது மலர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் பார்த்தசாரதிவித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Pudhu Malar Thottu Song Lyrics in Tamil


BGM

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

குழு : ஹோய்… தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து…
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து…
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து…
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

BGM

ஆண் : கூவ சொல்லாத குயிலை நிறுத்து…
ஆட சொல்லாத அலையை நிறுத்து…
காய சொல்லாத நிலவை கொளுத்து… ஓ…

ஆண் : முட்டி வழிகின்ற அருவி நிறுத்து…
சுற்றி வருகின்ற பூமி நிறுத்து…
பூமி துளைக்கின்ற புல்லை நிறுத்து…

ஆண் : இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்…
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்…
நட்சத்திர மண்டலத்தில் ஓர் இடம் வேண்டும்…
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்…

ஆண் : கண்ணசைவில் மின்னல் விழ…
புன்னகையில் பூக்கள் விழ…
கை அசைவில் வானம் விழ…
பெண் அசைவில் நானும் விழ…

ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே…
காதல் வந்ததே… காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

BGM

ஆண் : நனனனனனனா… நனனனனனா…

ஆண் : காதில் வேல் வீசும் கொலுஸை நிறுத்து…
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து…
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து…

ஆண் : கண்கள் கள வாடும் மின்னல் நிறுத்து…
கதறி அழுகின்ற இடி யை நிறுத்து…
கத்தி எழுகின்ற மலையை நிறுத்து…

ஆண் : அந்த இரு விழி தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்…
இதழ் வழி பொழிகின்ற மழை மட்டும் வேண்டும்…
அவளுக்கும் நான் மட்டும் தெரிந்திட வேண்டும்…
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்…

ஆண் : சிந்தி விழும் முதல் மழை…
வந்து விழும் முதல் அலை…
எந்திரிக்கும் முதல்வரை…
சுந்தரிக்கு சொந்தமாகவே…

ஆண் : காதல் வந்ததே… காதல் வந்ததே…
காதல் வந்ததே… காதல் வந்ததே…

ஆண் : புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து…
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து…
கிசு-கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து…
காதல் வந்ததே…

ஆண் : இரு முயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து…
இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து…
இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து…
காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே…

குழு : தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…

குழு : ஹோய்… தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா ரா…
தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா தின்தின்தாரா…
தின்தின்தாரா தின்தின்தாரா ரா…


Notes : Pudhu Malar Thottu Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. புது மலர் பாடல் வரிகள்.


செல்லா நம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன், ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Chella Nam Veetttukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு நம் ஜோடி வீடு…
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு நம் ஜோடி வீடு…
அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM

ஆண் : ஜன்னல் வழியே காற்றே வருக…
கதவு வழியே செல்வம் வருக…
வாஸ்து பாத்தே வாசல் வைத்தோம்…
வாழ்க்கை செழிக்க…

BGM

பெண் : முன்னே காணும் புல்வெளி வாழ்க…
மொட்டை மாடி ரோஜா வாழ்க…
ஊமை தென்றல் ஓடி வரட்டும்…
ஊஞ்சல் அசைக்க…

ஆண் : எங்கள் இதயம் அடுக்கி வைத்து…
இந்த இல்லங்கள் எழுந்ததம்மா…

பெண் : நீ சுவரில் காது வைத்தால்…
மனம் துடிப்பு கேட்குமம்மா…

குழு : நம் சொந்தம் வளர்ந்திருக்க பந்தம் தொடர்ந்திருக்க…
தலைமுறை இருபது வாழும் நம் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

BGM

ஆண் : வீடு மனைவி பிள்ளை எல்லாம்…
எல்லாருக்கும் வாய்ப்பதில்லை…
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம்…
நன்றி சொல்கிறோம்…

BGM

குழு : இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால்…
இங்கே ஒரு நாய்குட்டியாக வந்து…
வாழும் வரமே வேண்டும் உம்மை கேட்கிறோம்…

பெண் : இந்த வீடு வந்த நேரம்…
மழை பொன்னாய் பொழிந்ததம்மா…
அந்த மாலை நிழலை போல…
பந்தபாசம் வளருதம்மா…

குழு : இந்த சொந்தம் நெருங்கி வர…
சொர்க்கம் அருகில் வர…
சூரியன் உள்ளவரை வாழும் நம் வீடு…

BGM

ஆண் : செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…

பெண் : சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

ஆண் : இது மாடி வீடு…
பெண் : நம் ஜோடி வீடு…
ஆண் : அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்…
தெய்வம் வந்து வாழும் வீடு…

BGM


Notes : Chella Nam Veetttukku Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. செல்லா நம் பாடல் வரிகள்.


thirumana-malargal-song-lyrics-in-tamil

திருமண மலர்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாவித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Thirumana Malargal Song Lyrics in Tamil


BGM

பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே…
கனிவாய் கனிவாய் மரமே…
நதியும் கரையும் அருகே…
நானும் அவனும் அருகே…

பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை…
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…

BGM

பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

BGM

பெண் : தாலி கொள்ளும் பெண்கள்…
தாயை நீங்கும் போது…
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு…

BGM

பெண் : மாடி கொண்ட ஊஞ்சல்…
மடிமேல் கொஞ்சும் பூனை…
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு…

பெண் : அந்த நிலை இங்கே இல்லை…
அனுப்பி வைக்க வழியே இல்லை…
அழுவதற்கு வாய்ப்பே இல்லை…
அதுதான் தொல்லை…

பெண் : போனவுடன் கடிதம் போடு…
புதினாவும் கீரையும் சேரு…
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை…
ஏன் என்றால் சுவர்தான் உண்டு தூரம் இல்லை…

பெண் : இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா…
வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா…

பெண் : திருமண மலர்கள் தருவாயா…

BGM

பெண் : தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

BGM

பெண் : கன்னம் கிள்ளும் மாமி…
காதை திருகும் மாமா…
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு…

பெண் : மாதம் பத்து செல்ல…
மழலை பெற்றுக்கொள்ள…
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு…

பெண் : பாவாடை அவிழும் வயதில்…
கைறு கட்டிவிட்டவன் எவனோ…
தாலி கட்ட வந்தவன் அவனே…
உறவானவன்…

பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே…
மனசில் உள்ள பாஷை சொல்வான்…
மழை நின்ற மலரை போல பதமானவன்…
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்…

பெண் : தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே…
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே…

பெண் : திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…

பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே…
கனிவாய் கனிவாய் மரமே…
நதியும் கரையும் அருகே…
நானும் அவனும் அருகே…

பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை…
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…

BGM


Notes : Thirumana Malargal Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. திருமண மலர்கள் பாடல் வரிகள்.


காதல் வந்ததும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம் & கே.ஜே. யேசுதாஸ்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Kadhal Vandhadhum Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…

BGM

பெண் : புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

பெண் : தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…

BGM

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : தூங்காத காற்றே துணை தேடி ஓடி…
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா…

ஆண் : நில்லாத காற்று…
சொல்லாது தோழி…
நீயாக உந்தன் காதல் சொல்வாயா…

பெண் : உள்ளே எண்ணம் அரும்பானது…
உன்னால் இன்று ருதுவானது…

ஆண் : நான் அதை சோதிக்கும்…
நாள் வந்தது…
தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

BGM

பெண் : நீ வந்து போனால்…
என் தோட்டம் எங்கும்…
உன் சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்…

ஆண் : நீ வந்து போனால்…
என் வீடு எங்கும்…
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்…

பெண் : கனா வந்தால் மெய் சொல்கிறாய்…
கண்ணில் வந்தால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ என்னும் வார்த்தையால் வாவென்கிறாய்…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : தன்னனனானன…

ஆண் : தன்னனனானன…

பெண் : காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

பெண் : நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு…
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு…

ஆண் & பெண் : தன்னனனானன…
தன்னனனானன… தன்னனனானன…
தன்னனனானன…

—BGM—


Notes : Kadhal Vandhadhum Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vasam (2001). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்ததும் பாடல் வரிகள்.


தாலாட்டும் காற்றே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்பூவெல்லாம் உன் வாசம்

Thalattum Katre Vaa Song Lyrics in Tamil


ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

BGM

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

BGM

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…

BGM

ஆண் : கண்ணுக்குள் கண் வைத்து…
கண் இமையால் கண் தடவி…
சின்னதொரு சிங்காரம்…
செய்யாமல் போவேனோ…

BGM

ஆண் : பேச்சிழந்த வேளையிலே…
பெண் அழகு என் மார்பில்…
மூச்சுவிடும் ரசனையை…
முகராமால் போவேனோ…

BGM

ஆண் : உன் கட்டு கூந்தல் காட்டில்…
நனையாமல் போவேனோ…
அதில் கள்ள தேனை கொஞ்சம்…
பருகாமல் போவேனோ…

ஆண் : நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை…
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ…

ஆண் : நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்…
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ…

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…

BGM

ஆண் : ஒரு நாள் ஒரு பொழுது…
உன் மடியில் நான் இருந்து…
திருநாள் காணாமல்…
செத்தொளிந்து போவேனோ…

BGM

ஆண் : தலையெல்லாம் பூக்கள் பூத்து…
தள்ளாடும் மரமேறி…
இலையெல்லாம் உன் பேரை…
எழுதாமல் போவேனோ…

BGM

ஆண் : உன் பாதம் வாங்கி நெஞ்சில்…
பதியாமல் போவேனோ…
உன் கண்ணீர் எச்சில் ருசியை…
அறியாமல் போவேனோ…

ஆண் : உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…
உன் உடலை உயிர்விட்டு போனாலும்…
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ…

ஆண் : உன் அங்கம் எங்கெங்கும்…
உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ…

ஆண் : என் உரிமை நீதானோ…
என் உரிமை நீதானோ…

BGM

ஆண் : தாலாட்டும் காற்றே வா…
தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தலை கோதும் விரலே வா…

ஆண் : தொலை தூர நிலவே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…
தொட வேண்டும் வானே வா…

ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்…
என் ஜென்மம் வீணென்று போவேனோ…
உன் வண்ண திருமேனி சேராமல்…
என் வயது பாழ் என்று ஆவேனோ…
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்…
என் ஆவி சிறிதாகி போவேனோ…

ஆண் : என்னுயிரே நீதானோ…
என்னுயிரே நீதானோ… நீதானோ…


Notes : Thalattum Katre Vaa Song Lyrics in Tamil. This Song from Poovellam Un Vaasam (2001). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டும் காற்றே வா பாடல் வரிகள்.