Category Archives: ஆனந்தம்

என்ன இதுவோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Enna Ithuvo Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம்…
தோற்று போனேன் ஏதோ சுகம்…
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி…
உன் கண்களோடு இனி மோதல்தானடி…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

BGM

ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே…
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது…

ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது…
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது…

ஆண் : ஓஹோ… காதலி என் தலையணை…
நீ என நினைத்துக் கொள்வேன்…
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம்…
மார்புடன் அணைத்துக் கொள்வேன்…

ஆண் : கோடைக் கால பூங்காற்றாய்…
எந்தன் வாழ்வில் வீசுவாய்…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

BGM

ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்…
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்…

ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்…
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்…

ஆண் : ஓஹோ… காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்…
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்…

ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம்…
சுவாசக் காற்று தேவையா…

ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…

ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம்…
தோற்று போனேன் ஏதோ சுகம்…
ஏ… தென்றல் பெண்ணே இது காதல்தானடி…
உன் கண்களோடு இனி மோதல்தானடி…

BGM


Notes : Enna Ithuvo Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Viveka. என்ன இதுவோ பாடல் வரிகள்.


Choodithandha Song Lyrics in Tamil

சூடி தந்த சுடர்க்கொடியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Choodithandha Song Lyrics in Tamil


BGM

குழு : சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
தேடிக் கொண்ட திரவியமே…
தேன் மாலை போல வருக…

குழு : மின்னும் அம்பு விழி…
சந்திர பிம்பம் பொன்னொளி வீச…
மங்கை மைதிலி இவள்…
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட…
சங்கம் சூழ வருக…
ஸ்ரீரங்கன் தாளை அடைய…
வளர் திங்களாகி வருக…

BGM

ஆண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
குழு : கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
குழு : வீட்டோடு வாழவே…

ஆண் : அந்த தென்மதுரை மீனாள்…
விளக்கேற்ற வந்தாள்…
சீதனமாய் கையில்…
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்…

பெண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
குழு : இந்த கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
குழு : எங்கள் வீட்டோடு வாழவே…

BGM

பெண் : பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க…
குழு : பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க…

ஆண் : தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க…
குழு : இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க…

ஆண் : உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி…
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு…

ஆண் : மூணு முழம் மல்லிகைப்பூவும்…
கொஞ்சம் அல்வாவும் போதுமே…
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்…
அடி தலை சாஞ்சு மயங்குமே…

BGM

பெண் : தஞ்சாவூர் பொம்மப் போலத்தான்…
உங்க மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவார்…
குழு : ஆமா தலையாட்டுவார்…

ஆண் : தேசிங்கு ராஜன் எங்கண்ணன்… ஹேய்…
உங்க குதிரை வாலாட்டுமா…
குழு : ஆமா வாலாட்டுமா…

பெண் : ஏய்… தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே தந்திரம்…
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்…

ஆண் : போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி…
அது நமக்குள்ளதானடி…
ஜோடியத்தான் நல்லாப் பாருடி…
மதுர மீனாட்சி சொக்கன்டி…

BGM

குழு : வெள்ளிப்பனி முற்றத்தில்…
வெட்கம் எனும் தோட்டத்தில்…
மல்லிகை பூத்ததோ…
புது மல்லிகை பூத்ததோ…

குழு : மாடக் குயில் சத்தத்தில்…
மஞ்சள் முகம் நாணத்தில்…
மங்கலம் வந்ததோ…
தினம் மங்கலம் வந்ததோ…

குழு : இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில்…
தீபத் திருவிழா…
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே…
சின்ன வெண்ணிலா…

குழு : எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு…
தென்றல் சந்தனம் பூசுதோ…
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்…
ஒரு தேவதை வந்ததோ…

BGM


Notes : Choodithandha Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Pa. Vijay. சூடி தந்த சுடர்க்கொடியே பாடல் வரிகள்.


ஆசை ஆசையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கே.ஜே. யேசுதாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Aasai Aasaiyai Song Lyrics in Tamil


BGM

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

ஆண் : நம்மை காணுகிற கண்கள்…
நம்மோடு சேர கெஞ்சும்…
சேர்ந்து வாழுகின்ற இன்பம்…
அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்…

ஆண் : ஒரு நாள் கூட இங்கு வரமாகும்…
உயிர் எங்கள் வீடாகும்…
சுகமாய் என்றும் இங்கு விளையாடும்…
நிரந்தர ஆனந்தம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… நம் தாயின் முகத்தில்…
ஒரு கோடி கடவுள்…
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்…

BGM

ஆண் : தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி…
கோவிலை போல மாற்றிடுவோம்…

ஆண் : அன்னைக்கு பணிவிடை செய்திடவே…
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்…
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்…
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்…
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…

ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே…
இதுபோல் வாழ்ந்திடவே…
பாச பூமழை பொழிகிறதே…
இதயங்கள் நனைந்திடவே…

BGM

ஆண் : ஓ… பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும்…
ஓவியம் போல சேர்ந்திருப்போம்…

BGM

ஆண் : வரலாறு எல்லாம் நம் பேரை நாளை…
சொல்வதை போல வாழ்ந்திருப்போம்…

ஆண் : எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்…
நாணலை போல்தானே…
நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்…
தூண்களை போல் நாமே…
அடை மழையாக பெய்யும் சந்தோசம்…

குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…
ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச…


Notes : Aasai Aasaiyai Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Kalaikumar. ஆசை ஆசையாய் பாடல் வரிகள்.


கல்யாண வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தொல்காப்பியன்உன்னி மேனன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil


குழு : ஹேய்… ஜொலிக்க ஜொலிக்க…
ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…

குழு : சாமந்தி வாசத்தில் ரெண்டும்…
சந்தனத்தை பூசிக்கிச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…

BGM

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

ஆண் : அழியாதது காதல் கோலம்…
ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…

ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில்…
கார்த்திகை நாளும்…
வீட்டுக்குள் வர வேண்டும்…

ஆண் : எந்தன் தோட்டது பூவுக்கும்…
பூக்கும் ஆசை…
உன்னால் எழ வேண்டும்…

பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

BGM

பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி…
வாசல் எங்கும் தெளிப்பேனே…

ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே…
யாரோ போல ரசிப்பேனே…

பெண் : ஜீவநதி ஏங்கும்…
ஆண் : ஏங்கும்…
பெண் : அடி மனசு பொங்கும்…

ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…
பெண் : எங்கும்…
ஆண் : உன் நினைவு தங்கும்…

பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு…
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்…

ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…

பெண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

BGM

பெண் : மனைவியான நிமிசத்திலிருந்து…
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே…

ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்…
துள்ளி எழுந்து பார்ப்பேனே…

பெண் : குளியலறை பக்கம்…
ஆண் : பக்கம்…
பெண் : தலை துவட்ட வருவேன்…

ஆண் : படுக்கையினில் மிச்சம்…
பெண் : மிச்சம்…
ஆண் : வைத்து அங்கே தருவேன்…

பெண் : வளையோசையால்…
சைகை காட்டுவேன்…

ஆண் : தயங்காமலே தேவை…
யாவும் கேட்பேன்…

பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…

ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…

பெண் : அழியாதது காதல் கோலம்…

ஆண் : ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…


Notes : Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil. This Song from Aanandham (2001). Song Lyrics penned by Tholkapiyan. கல்யாண வானில் பாடல் வரிகள்.


பல்லாங்குழியின் வட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஎஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Pallanguzhiyin Vattam Song Lyrics in Tamil


BGM

பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

பெண் : துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்…

BGM

பெண் : கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்…

BGM

பெண் : செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்…
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்…
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

குழு : ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப …
ப ச ச நீ த நீ ப த ப ம…
க ம க க ம நீ ப க ரி க ச…

பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

BGM

ஆண் : அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்…
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்…
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்…
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்…
நெஞ்சில் வைத்து காத்திரு…

பெண் : தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை…
இந்த நாணயம் போதாதா…
தழுவும் மனதை குங்கும சிமிழில் தடுக்க முடியாதா…

ஆண் : செல்வ சீதனமே…
நீ சிரிக்கையிலே…
பல சில்லரை சிதறிவிடும்…
செலவு செய்ய நினைத்தால் கூட…
இதயம் பதறிவிடும்…

ஆண் & பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

BGM

பெண் : அட நேற்று நடந்தது நாடகமா…
நீ காசு கொடுத்தது சூசகமா…
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு…
என்ன சொல்ல காசு தந்தாய்…
எண்ணி எண்ணி பார்க்கிறேன்…

ஆண் : அடி பேரழகே…
உன்னை சேர்ந்திடவே…
இந்த நாணயம் ஓர் சாட்சி…
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்…
எதற்கு ஆராய்ச்சி…

பெண் : இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்…
பிறர் பார்க்கவும் விடமாட்டேன்…
கடவுள் வந்து கேட்டால் கூட…
காணிக்கை இட மாட்டேன்…

ஆண் & பெண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

ஆண் & பெண் : துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்…

BGM

ஆண் & பெண் : கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்…

BGM

ஆண் & பெண் : செவ்வந்தி பூவில் நடுவில் பார்த்தேன்…
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்…
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…

குழு : ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப…
ப ச ச நீ த நீ ப த ப ம…
க ம க க ம நீ ப க ரி க ச ச ரி ச…
ச ரி ச ம க ரி க…
ச ரி ச ம க ரி க ம ப…
ப ச ச நீ த நீ ப த ப ம க…
ம க க ம நீ ப க ரி க ச…


Notes : Pallanguzhiyin Vattam Song Lyrics in Tamil. This Song from Aanandham (2001). Song Lyrics penned by Yugabharathi. பல்லாங்குழியின் வட்டம் பாடல் வரிகள்.