Category Archives: ரிதம்

anbe-ithu-song-lyrics-in-tamil

அன்பே இது நிஜம்தானா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Anbe Ithu Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே இது நிஜம்தானா…
என் வானில் புது விண்மீனா…
யாரைக் கேட்டது இதயம்…
உன்னைத் தொடர்ந்து போக…

பெண் : என்ன துணிச்சல் அதற்கு…
என்னை மறந்து போக…
இருந்தும் அவை இனிய வலிகளே…

BGM

பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…

பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…

பெண் : விரல் தொடவில்லையே…
நகம் படவில்லையே…
விரல் தொடவில்லையே…
நகம் படவில்லையே…
உடல் தடையில்லையே…
இது போல் ஒரு இணையில்லையே…

பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…

BGM

பெண் : ஆஆஹா… விழியும் விழியும் கலந்து கலந்து…
பார்வை ஒன்று ஆனதே…
உயிரும் உயிரும் கலந்த போது…
உலகம் நின்று போனதே…

பெண் : விழியும் விழியும் கலந்து கலந்து…
பார்வை ஒன்று ஆனதே…
உயிரும் உயிரும் கலந்த போது…
உலகம் நின்று போனதே…

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…

பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…
ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்கசெல்லுதோ…

BGM

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ…

பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால்…
அதற்குப் பெயரும் நிலவில்லை…

BGM

பெண் : நினைக்கும்போது நிலவு உதிக்கும்…
நிலவு அழைக்கக் குரலில்லை…

பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால்…
அதற்குப் பெயரும் நிலவில்லை…
நினைக்கும்போது நிலவு உதிக்கும்…
நிலவு அழைக்கக் குரலில்லை…

பெண் : யாரைக் கேட்டது இதயம்…
யாரைக் கேட்டது இதயம்…
ஆஆஆஆ… ஆஆஆஆ… ஆஆஆ…
விழி தொடுவது விரல் தொடவில்லை…

பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும்…
மேகம் எங்கு செல்லுதோ…

BGM

பெண் : ஒளியில்லாமல் மலரும் மலரை…
உளவு பார்க்க செல்லுதோ…

BGM


Notes : Anbe Ithu Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. அன்பே இது நிஜம்தானா பாடல் வரிகள்.


அய்யோ பத்திகிச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Ayyo Pathikichu Song Lyrics in Tamil


BGM

பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ கண்ணே…

ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு ஓஓ பெண்ணே…

பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு…
சிக்கிகிச்சு ஓஓ கண்ணே…

BGM

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…

ஆண் : ஹே… முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

பெண் : முள்ளை முள்ளால் எடுப்பது போல்…
நெருப்பை நெருப்பால் அணைப்போம்…
உன் கண்ணோடு வாழ்கின்ற…
காதல் தீ வாழ்க…

ஆண் : அய்யோ பத்திகிச்சு…

BGM

பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்…
ஒன்றோடு ஒன்று உரச…
பொறி வருமே வா வா…
ஹா ஹா ஹா…

ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்…
ஆசையில் எரியும் சரிதான்…
அணைவதற்குள் வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : காதல் நெருப்பு உள்ளவரை…
காலம் உறைவதில்லை…
கதிரவனே வா வா…
காதலிப்போம் வா வா…

ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம்…
காதல்தான் முதல் மெய்ஞானம்…
தீ பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…

BGM

ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்…
காதல் எரிவது எதிலே…
விடை சொல்ல வா வா…
வா வா வா வா வா வா வா…

பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி…
காதல் தன் சுடர் கொளுத்தும்…
ஒளி விடுவோம் வா ஆஹா…
வா ஆஹா ஆஆ…

ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து…
கவலைக் குப்பைகளைக் கொளுத்து…
சுடர் வளர்ப்போம் வா வா…
சுகம் வளர்ப்போம் வா வா வா…

பெண் : தீபம் போலே இருந்தவள் நான்…
தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்…
பத்திகிச்சு பத்திகிச்சு…
பத்திகிச்சு பத்திகிச்சு…
அய்யோ அய்யோ அய்யோ…

BGM


Notes : Ayyo Pathikichu Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. அய்யோ பத்திகிச்சு பாடல் வரிகள்.


காற்றே என் வாசல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகவிதா பவுட்வல் & பி.உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Kaatre En Vasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

ஆண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

ஆண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

BGM

ஆண் : கார்காலம் அழைக்கும் போது…
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்…
தாவணி குடை பிடிப்பாயா… ஆ…

பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்…
அழகான இடம் வேண்டும்…
கண்களில் இடம் கொடுப்பாயா…

ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய…
நான் உன் மனதில் சென்று ஒளிய…
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா… ஆஆ…

பெண் : பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…

ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்…
காதலும் வாழ்க…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : ம்ம்ம்… நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

BGM

பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே…
உருண்டு நிற்க்கும் முத்து போல்…
என் பெண்மை திரண்டு நிற்கிறதே… ஏ…

ஆண் : திறக்காத சிப்பி என்னை…
திறந்து கொள்ள சொல்கிறதா…
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே… ஏ…

பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்…
உன் வருகையினால் வயதறிந்தேன்…
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா… ஆ ஆ…

ஆண் : கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…

பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்…
பிழையா பிழையா…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக…

பெண் : காற்றே உன் பேரை கேட்டேன்…
காதல் என்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்…
காற்றே தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…


Notes : Kaatre En Vasal Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. காற்றே என் வாசல் பாடல் வரிகள்.


தனியே தன்னந்தனியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil


BGM

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

BGM

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

BGM

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…

ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……


Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.


நதியே நதியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Nadhiye Nadhiye Song Lyrics in Tamil


ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM

ஆண் : நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

ஆண்: தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…
நின்றால் கடல்லோ… ஓஓ…
சிறு நதிகளே நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

சிறு நதிகளே நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும் கரை தோறும்
அட ஆறும் இசை பாடும்….

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே…

குழு (ஆண்கள்) : கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும் கரை தோறும்
அட ஆறும் இசை பாடும்…

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே….

குழு (ஆண்கள்) : கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

ஆண் : காதலி அருமை பிரிவில்…
மனைவியின் அருமை மறைவில்…
நீரின் அருமை அறிவாய் கோடையிலே….

வெட்கம் வந்தால் உறையும்…
விரல்கள் தொட்டால் உருகும்…
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே….

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

BGM

ஆண் : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : வண்ண வண்ண பெண்ணே…
வட்டமிடும் நதியே…
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு…

ஹோ….

ஆண் : மெல்லிசைகள் படித்தல்…
மேடு பள்ளம் மறைத்தல்…
நதிகளின் குணமே….
அது நங்கையின் குணமே…

சிறு நதிகளே… நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே….

சிறு நதிகளே… நதியிடும் கரைகளே….
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

ஆண் : தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : தீங்கனியில் சாராகி…
பூக்களிலே தேனாகி…
பசுவினிலே பாலாகும் நீரே…

தாயருகே சேயாகி…
தலைவனிடம் பாயாகி…
சேயருகே தாயாகும் பெண்ணே…

ஆண் : பூங்குயிலே… பூங்குயிலே…
பெண்ணும் ஆறும்…
வடிவம் மாறக்கூடும்…

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்…
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்…

நதியே நதியே காதல் நதியே
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM


Notes : Nadhiye Nadhiye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. நதியே நதியே பாடல் வரிகள்.